Home Tamil Movie News சன் டிவியில் தூள் கலப்பும் 5 சீரியல்கள்.. அன்பு ஆனந்தியை சேர்த்து வைக்கப் போகும் மகேஷ்,...

சன் டிவியில் தூள் கலப்பும் 5 சீரியல்கள்.. அன்பு ஆனந்தியை சேர்த்து வைக்கப் போகும் மகேஷ், மல்லி கொடுத்த அதிரடி

sun-tv-logo
sun-tv-logo

Sun Tv Serials: சின்னத்திரை சீரியல் மூலம் மக்களை தினமும் கவர்ந்திழுக்க கூடிய ஒரு சேனல் தான் சன் டிவி. சீரியலுக்கு என்று எத்தனை சேனல்கள் வந்தாலும் சன் டிவிக்கு ஈடாகாது என்று சொல்வதற்கு ஏற்ப மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் மக்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இந்த ஐந்து சீரியல்கள் மக்கள் மனதை அதிகளவில் கொள்ளை அடித்திருக்கிறது.

அதிரடியான திருப்பங்களுடன் சக்க போடு போடும் சன் டிவி சீரியல்

அதில் மல்லி என்ற சீரியல் மூலம் விஜய், வெண்பா, மல்லி மூவரும் மக்கள் மனதில் பதிந்து விட்டார்கள். அந்த வகையில் தற்போது வெண்பாவை கூட்டிட்டு போக கதிரேசன் வந்த நிலையில் மல்லி அதிரடியாக முடிவை எடுத்து வெண்பாவை கொடுக்க மறுத்துவிட்டார். அத்துடன் மல்லி பேசிய பேச்சில் தலைதரித்து கதிரேசன் ஓடிவிட்டார். ஆனால் தற்போது விஜயை தவறாக புரிந்து கொண்ட வெண்பா பேசாமல் கோபப்பட்டு ஒதுங்கிப் போகிறார். இதனால் வெண்பா மற்றும் விஜயை சேர்க்கும் விதமாக அடுத்து மல்லி ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகிறார்.

அடுத்ததாக மூன்று முடிச்சு நாடகத்தின் மூலம் சூர்யா மற்றும் நந்தினியின் கெமிஸ்ட்ரி மக்களை கவர்ந்து விட்டது. என்னதான் சூர்யாவுக்கு தற்போது கல்யாணம் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தாலும் நந்தினியை தான் சூர்யா கல்யாணம் பண்ண போகிறார். அந்த வகையில் இந்த ஒரு காட்சிக்காக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை அடுத்து கஞ்சத்தனமாக இருக்கும் பிரபுவின் கல்யாண வேலைகள் எல்லாம் கைக்கு மீறிய செலவுகளை இழுத்துக் கொண்டே போகுது. அதனால் ஆதிரை என்ன சொன்னாலும் அதை செய்யும் இக்கட்டான சூழ்நிலையில் பிரபு இருக்கிறார். ஏனென்றால் பிரபுவை பொறுத்தவரை எப்படியாவது ஆதிரையை கல்யாணம் பண்ண வேண்டும் என்ற நினைப்பில் இருப்பதால் எல்லாத்தையும் சகித்துக் கொண்டு வருகிறார். இதற்கிடையில் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று நடக்கும் சதிகளை முறியடிக்கும் விதமாக ஆதிரை ஒவ்வொருவருக்கும் பதிலடி கொடுத்து வருகிறார்.

அடுத்ததாக எப்பொழுது கயல் எழில் கல்யாணம் நடக்கும் என்று எதிர்பார்த்த இந்த தருணத்தில் கயிலை கடத்திட்டு போய் பல குழப்பங்களை செய்து வரும் சிவசங்கரின் ஆட்டத்திற்கு முடிவு கட்டும் விதமாக எழில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறார். அந்த வகையில் சிவசங்கரி மற்றும் தீபிகாவின் ஆட்டம் கிளோஸ் ஆகிவிடும்.

இதனை அடுத்து மகேஷ் ஆனந்திக்கு பொருத்தமான ஜோடியாக இருப்பார் என்று நினைத்து ஆனந்தியை விட்டு அன்பு கொஞ்சம் கொஞ்சமாக விலகி விட்டார். இந்த சூழ்நிலையில் இப்பொழுது என்னதான் ஆனந்தி, அன்புவை நினைத்து வருத்தப்பட்டாலும் மனதிற்குள் ஒரு காதல் உணர்வு ஏற்படப்போகிறது. இதை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் இந்த தருணத்தில் மகேஷ் இவர்களுடைய காதலை புரிந்து கொண்டு அன்பு ஆனந்தியை சேர்த்து வைக்கும் முயற்சியில் கல்யாணத்தை செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.