எங்க ரெண்டு பேரோட ஃபியூச்சர் பிளான் இதுதான்- ஓப்பனாகப் போட்டுடைத்த ஜெயம்ரவி!

தமிழ் சினிமாவின் சாக்லெட் பாயாக இருந்த ஜெயம் ரவி ,கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தன் காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில், அடுத்த நாள், 10ஆம் தேதி நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு மனுதாக்கல் செய்துள்ளார்.

இது தன் ஒப்புதலின்றி வெளியான ஒருதலைப்பட்சமான அறிவிப்பு என்று ஆர்த்தி இன்ஸ்டாவில் அறிவித்த நிலையில், இது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுவரை கிளீன் இமேஜுடன் வலம் வந்த ஜெயம் ரவி மீது கருப்புப் புள்ளி வைக்கப்பட்டதுபோல் இந்த விவகாரம் ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டது.

இவ்விவகாரத்தில் முக்கியப் பிரச்சனையாக ஜெயம்ரவிக்கும் கோவாவைச் சேர்ந்த பிரபல பாடகி கெனிஷாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்தநிலையில், சென்னையிலுள்ள ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில், நேற்று, ஜெயம்ரவி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ’விவாகரத்து நோட்டீஸ் ஆர்த்திக்குத் தெரியாது என்பதில் நிஜமில்லை. ஏற்கனவே 2 முறை அவருக்கு லாயர் மூலர் வக்கீல் நோட்டீஸ் அன்பினேன் ’என்று கூறினார்.

மேலும், பாடகி கெனிஷாவுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாக பரவி வரும் வதந்தி பற்றி பேசிய ஜெயம்ரவி, ’’தன்னை கெனிஷாவுடன் இணைத்துப் பேசவேண்டாம் ! அவர் ஒரு மனோதத்துவ மருத்துவர்….அவருடன் இணைந்து ஹீலிங் மையம் ஒன்றைத் தொடங்கப்போகிறேன்’’ என்று கூறினார்.

ஏற்கனவே ஜெயம் ரவி விவகாரம் தீயில் ஊற்றிய எண்ணெய்யாக கொழுந்துவிட்டு எரிய, பாடகியுடன் இணைந்து ஹீலிங் மையம் ஒன்றை அமைக்கவிருப்பதாக கூறியுள்ளது பற்றி நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

Trending News

- Advertisement -spot_img