வெளிப்படையாக கெனிஷா உறவைப் பற்றி உளறிய ஜெயம் ரவி.. திறந்த புத்தகமா மாறிய தனி ஒருவன்

ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதியினர் இப்பொழுது விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரும் ஒன்றாக இல்லை. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் குடும்ப வாழ்க்கை பிரிந்ததற்கு பல காரணங்கள் கூறினாலும் இப்பொழுதுதான் ஒவ்வொரு குட்டாக வெளி வருகிறது.

கடந்த சில வருடங்களாகவே ஜெயம் ரவி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அவரது மனைவி அவரை சந்தேக கண்களுடன் பார்த்துள்ளார், அதற்கும் இப்பொழுது விடை கிடைத்துள்ளது. ஜெயம் ரவியின் மனைவி மிகவும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்.

ஆர்த்தியின் தாயார் பிரபல சினிமா தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார். இவர் ஜெயம் ரவியை வைத்து சைரன், பூமி, அடங்கமறு போன்ற படங்களை தயாரித்துள்ளார். இப்பொழுது அடுத்த படத்திற்காக சொந்த மாமியாரிடமே 25 கோடிகள் வரை சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இது அவரது மனைவி ஆர்த்திக்கு பிடிக்கவில்லையாம்.

திறந்த புத்தகமா மாறிய தனி ஒருவன்

ஜெயம் ரவி வீட்டோட மாப்பிள்ளையாக இருந்துள்ளார். அது மட்டுமின்றி அவரது மனைவி ஆர்த்தி ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வரை செலவு செய்யக் கூடிய பேர்வலியாம். இதனால் வீட்டில் அடிக்கடி சந்தேகம் மற்றும் சண்டை. இதனால் ஜெயம் ரவி வீட்டில் இருப்பதில்லை. ஷூட்டிங் என்று சொல்லிக்கொண்டு கோவாவில் தான் கடந்த ஆறு மாதமாக இருந்துள்ளார்.

மாடல் அழகி மற்றும் பாடகி கெனிசா பிரான்சிஸ் உடன் தான் கோவாவில் தங்கியுள்ளாராம். இதைப்பற்றி ஜெயம் ரவியிடம் கேட்டதற்கு , கெனிசா பல உயிர்களை காப்பாற்றிய சைக்காலஜி ஹீலர் தெரபிஸ்ட், அவருடன் சேர்ந்து வருங்காலத்தில் ஹாஸ்பிடல் தொடங்க போகிறேன். இதுதான் எங்கள் திட்டம் என்று கூறி வருகிறார். அதனால் இருவரும் ஒன்றாக இருக்கிறோம் என திறந்த புத்தகமாய் பதில் சொல்லியுள்ளார்.

Trending News

- Advertisement -spot_img