Home Tamil Movie News ஜெயம் ரவி ‘Ayahuasca’ மருந்தின் பிடியில் இருக்கிறார்?. ஆர்த்தியை எச்சரித்த சுசித்ரா, Ayahuasca-வின் பக்க விளைவுகள்

ஜெயம் ரவி ‘Ayahuasca’ மருந்தின் பிடியில் இருக்கிறார்?. ஆர்த்தியை எச்சரித்த சுசித்ரா, Ayahuasca-வின் பக்க விளைவுகள்

Jayam Ravi Suchithra
Jayam Ravi Suchithra

Jayam Ravi: நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து பிரச்சனை தான் இப்போதைக்கு சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்சனை, ஈகோ, அதீத காதல், திருமணத்தை மீறிய உறவு என்பதை தாண்டி இந்த பிரச்சனையை வேறு திசையில் மாற்றி இருக்கிறார் பாடகி சுசித்ரா.

ஜெயம் ரவியின் விவாகரத்திற்கு காரணமாக சொல்லப்படும் கெனிஷா பிரான்சிஸ் பற்றி சுசித்ரா பேசியிருக்கும் விஷயம் பதற வைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டும் இல்லாமல் இந்த விஷயத்தில் ஆர்த்தியை சுசித்ரா எச்சரித்து இருப்பது இன்னும் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

அதாவது கெனிஷா பிரான்சிஸ் பப்பில் பாடுவது மட்டுமில்லாமல், மனம் நலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருகிறார். தன்னுடைய twitter பக்கத்தில் கூட மெண்டல் ஹெல்த் அட்வகேட் என தன்னை குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆர்த்தியை எச்சரித்த சுசித்ரா

இவர் நேச்சுரோபதி முறையில் செய்யும் மனநல சிகிச்சை இந்தியா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒன்று என சுசித்ரா சொல்லி இருக்கிறார். இந்த சிகிச்சை தான் ஜெயம் ரவியின் விவாகரத்துக்கு காரணம் என்றும் சொல்லி இருக்கிறார்.

கெனிஷா தன்னுடைய சிகிச்சை முறையில் Ayahuasca என்ற மருந்தை பயன்படுத்துகிறாராம். மனநல சிகிச்சைக்கு இந்த மருந்தை பயன்படுத்தவே கூடாதாம். அந்த சிகிச்சை அதீத கோபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்று என்று சுசித்ரா சொல்லி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஈகோ பார்க்காமல் அவருடைய கணவரை காப்பாற்ற சில விஷயங்களில் இறங்கி ஆக வேண்டும். சமூக வலைத்தளத்தில் ஆதரவு தேடிக் கொண்டிருப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. கண்ணகி போல் இறங்கி போராடி உன் வாழ்க்கையை காப்பாற்று என்று சொல்லி இருக்கிறார்.

Ayahuasca-வின் பக்க விளைவுகள்:

Ayahuasca என்பது ஒரு தென் அமெரிக்க மனதை தூண்டும் பானமாகும். நாட்டு மருந்து சிகிச்சையாளர்கள் இந்த மருந்தை ஆன்மிக சடங்குகள், சாமி பார்க்கும் முறைகள் மற்றும் பலவிதமான உடல் மற்றும் மன நோய்களை குணமாக்குவதற்காக பயன்படுத்தி வந்துள்ளனர்.

அயஹூஸ்கா உட்கொள்வது மயக்கம் மற்றும் வாந்தி போன்ற விளைவுகளை ஏற்படுத்தலாம். இது சுவாசக் குறைபாடுகள் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது . மனநிலை பாதிப்புக்கு முன்பே predisposition உள்ளவர்களில், அயஹூஸ்கா மனநிலை பாதிப்பைத் தூண்டக்கூடியது.

மனநல விளைவுகள்

அயஹூஸ்கா உண்டவர்களிடம் மெய்மறந்த அனுபவங்கள் மற்றும் தாங்கள் பூமியில் உள்ள நோக்கம், பிரபஞ்சத்தின் உண்மையான இயல்பு, மேலும் தங்களை மிகச்சிறந்தவர்களாக மாற்றுவது எப்படி என்பதற்கான ஆழ்ந்த புத்திசாலித் தன்மைகள் குறித்த ஆன்மிக வெளிப்பாடுகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

இந்த மருந்தை உட்கொள்பவர்கள் இதை ஆன்மீக விழிப்புணர்வாகவும், மரணத்தை ஒட்டிய அனுபவம் அல்லது மறுபிறவி என்று விவரிக்கின்றனர்.

சிலருக்கு நியாபக மராத்தி இருப்பதாகவும், தங்களாகவே காட்சிகளை உருவகப்படுத்தி கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்கள் என இந்த மருந்தை பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஜெயம் ரவியின் விவாகரத்து பற்றிய சுசித்ரா சொன்ன காரணமும், இந்த மருந்தின் பக்க விளைவுகள் பற்றிய கட்டுரைகளும் ஒருவித திகிலை தான் ஏற்படுத்துகின்றன.