Dhanush: டிவிட்டர் பக்கம் போக முடில, அடித்து கொள்ளும் கமல்-ரஜினி பேன்ஸ்.. தேரை இழுத்து தெருவுல விட்டுட்டியே தாய்க்கிழவி !

Dhanush: ‘ ஆள பாத்தா ஒய்யார கொண்டையாம், உள்ள பாத்தா ஈரும் பேணுமாம்’ என்ற கதையா போச்சு கமல் மற்றும் ரஜினியின் சொந்த வாழ்க்கை. இந்திய திரையுலகமே பிரமித்து பார்க்கும் இரு பெரும் தூண்கள் ஆன உலகநாயகன் மற்றும் சூப்பர் ஸ்டார் இன்றைய இணையவாசிகளிடம் சிக்கிக்கொண்டு படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் இவங்களுக்கு எல்லாம் ரஜினி என்றால் சொல்லவே வேணாம் அல்வா போல் மென்று விடுவார்கள். அப்படி இருக்கும் போது இன்னும் சேர்த்து நாளும் மெல்ல நன்றாக மென்று முழுங்குங்கள் என்று சொல்லி அம்மணி ஒருவர் கண்டன்டு கொடுத்திருக்கிறார்.

இன்னைக்கு காலையிலிருந்து சமூக வலைத்தளத்தின் உள்ளே போறவங்க எல்லாருக்குமே அதிர்ச்சி. பல வருடத்திற்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவை ஆட்டம் காண வைத்த பாடகி சுசித்ரா கொடுத்த பேட்டி தான் அதற்கு காரணம்.

தேரை இழுத்து தெருவுல விட்டுட்டியே தாயே!

என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் ஓரினசேர்க்கையாளர், தனுஷும் என் புருஷனும் ஒரே பெட்ல என்ன பண்ணிட்டு இருந்தாங்க என வாயைத் திறந்தாலே பட்டாசு வெடிக்கும் அளவுக்கு பேசி விட்டார். அது மட்டும் இல்லாமல் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து பற்றியும் பேசி இருந்தார்.

தனுஷ் மீது தனக்கு எவ்வளவு கோபம் இருந்தாலும் இந்த விவாகரத்து விஷயத்தில் ஐஸ்வர்யா மீது தான் எல்லா தப்பும் என்று சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தனுசை விட ஐஸ்வர்யா தான் மோசமானவர், கல்யாணத்துக்கு பிறகும் டேட்டிங் செய்தார் என்றெல்லாம் ஏகத்துக்கும் பேசி விட்டார்.

ஏற்கனவே ரஜினி பொண்ணுங்கண்ணா சர்ச்சைக்கு அளவே இருக்காது. இப்போ ஐஸ்வர்யாவை பற்றி கமெண்ட் பண்ணி, ரஜினி வரைக்கும் பேச ஆரம்பித்து விட்டார்கள். உடனே ரஜினியின் விசுவாசிகளுக்கு கோபம் வந்து உங்க ஆண்டவர் பொண்ணுங்க மட்டும் என்ன குறைஞ்சவங்களா என்று ஆரம்பித்து விட்டார்கள்.

ஸ்ருதிஹாசன் யார் யாரை டேட்டிங் பண்ணி கழட்டி விட்டார் என்ற லிஸ்டையே இரண்டாகி கொண்டு இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களாக கௌரவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ரஜினி மற்றும் கமல் இது போன்ற சர்ச்சைகளில் சிக்கி சில வார்த்தைகளை கேட்பது என்பது நடுநிலையான சினிமா ரசிகர்களுக்கு மன கஷ்டத்தை தான் கொடுக்கிறது.

Next Story

- Advertisement -