Suriya: நடிப்பை தாண்டி சூர்யா பல விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அதில் முக்கியமானது அகரம் என்ற அறக்கட்டளையை தொடங்கி அவர் பல மாணவர்களை படிக்க வைத்து வருவது தான். இதன் மூலம் படித்த பலர் இன்று மிகப்பெரும் அந்தஸ்தில் இருக்கின்றனர்.
இப்படி ஒரு மகத்தான விஷயத்தை செய்து வரும் சூர்யா மற்ற ஹீரோக்களுக்கு முன்னோடியாக இருக்கிறார். அது மட்டும் இன்றி பல சமுதாய விஷயங்களுக்காக குரல் கொடுப்பதிலிருந்து பல நல்ல விஷயங்களை தன் ரசிகர்கள் மூலம் இவர் செய்து வருகிறார்.
அதில் தற்போது அவர் செய்துள்ள ஒரு விஷயம் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதன்படி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருடைய ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர்.
சூர்யாவுக்கு குவியும் பாராட்டுக்கள்
கடந்த வருடம் இதேபோல் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்திருந்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த சூர்யா அவர்களை பாராட்டியதோடு நேரில் வரவழைத்து விருந்து வைத்து கௌரவித்தார்.
அது மட்டும் இன்றி அடுத்த வருடம் நிச்சயம் நானும் இதில் பங்கேற்பேன் என வாக்கும் கொடுத்திருந்தார். அந்த வாக்கை காப்பாற்றுவதற்காக தான் தற்போது அவர் சென்னை வந்துள்ளார். அவர் ரத்ததானம் செய்த வீடியோக்களும் போட்டோக்களும் தற்போது வைரலாகி வருகிறது.
கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் இது போன்ற விஷயத்தில் எல்லாம் பங்கெடுப்பது கிடையாது. ஆனால் அவர்களில் சூர்யா வித்தியாசமானவர் என்பதை நிரூபித்துள்ளார். இவருக்கு தற்போது அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ரத்த தானம் செய்து ஆச்சரியப்படுத்திய சூர்யா
- சர்ச்சைகளுக்கு நடுவே ரொமான்டிக் புகைப்படங்களை இறக்கிய சூர்யா ஜோதிகா
- சூர்யா-ஜோ முதல் விக்கி-நயன் வரை
- பறிபோன படவாய்ப்பு, கேள்விக்குறியாகும் சூர்யாவின் சினிமா கேரியர்