Home Tamil Movie News என்கிட்ட துப்பாக்கி இருக்கு.. விஜய் பேரை கேட்ட உடன் பல்டி அடித்த ஆதீனம்.. என்ன நடந்தது?

என்கிட்ட துப்பாக்கி இருக்கு.. விஜய் பேரை கேட்ட உடன் பல்டி அடித்த ஆதீனம்.. என்ன நடந்தது?

சில நாட்களுக்கு முன்பு, வைகை ஆற்றை சுத்தம் செய்ய நாள் ஒன்று 15 ஆயிரம் பணம் கேட்டு வழக்கறிஞர்கள் 3 பேர் வந்தார்கள். 20 நாள் சுத்தம் செய்யணும், அந்த பணத்தை நீங்கள் தரவேண்டும் என்று கேட்டதற்கு முடியாது என்று ஆதீனம் சொன்னாராம்.

மேலும், அரசாங்கம் இருக்கு, மாவட்ட ஆட்சியர் இருக்கிறார் அனைவரும் சேர்ந்து தான் சுத்தம் செய்ய வேண்டும் தனிமரம் தோப்பாகாது உங்களால் செய்ய முடியாது என்றும் ஆதீனம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து இதற்கு முன் இருந்த ஆதினம் எங்களுக்கு கொடுத்தார் என்று அந்த வழக்கறிஞர்கள் கூறினார்களாம் .

இதை தொடர்ந்து, “இதற்க்கு முன்பு வந்த வழக்கறிஞர்கள் இப்படி தான் ஏமாற்றினார்கள். அதனால் உங்களுக்கு என்னால் தரமுடியாது என்று கூற. அந்த வழக்கறிஞர்கள், இந்த இடத்தில் நீங்கள் இருப்பதற்கு தகுதியற்றவர் என்று கூறியிருக்கிறார்கள்.”

என்கிட்ட துப்பாக்கி இருக்கு

இதில் வாக்குவாதம் சூடுபிடித்து கோர்ட் கேஸ் என்று தற்போது ஆகி இருக்கிறது. இப்படி இருக்க பத்திரிகையாளர் ஒருவர், பழைய ஆதீனம் துப்பாக்கி வைத்திருந்தாரே? உங்களுக்கு அது இல்லையா என்று கேள்வி எழுப்ப. எனக்கு என் வாய் தான் துப்பாக்கி என்று பதில் அளித்துள்ளார். மேலும் தளபதி விஜய் பற்றி அவர் சொன்ன கருத்து தற்போது ஒரு பேசும்பொருளாக மாறி உள்ளது.

விஜய் பற்றி பேசிய ஆதீனம்

நடிகர் விஜய் பற்றி கேள்வி கேட்டதற்கு, ‘சினிமாக்காரர்கள் பற்றி நான் பேசமாட்டேன். போன முறை நான் ஏதோ பேசப்போக, எனக்கு பேண்ட் சட்டை எல்லாம் போட்டு விட்டாங்க. விஜய் பற்றி நான் எதுவும் பேச விரும்பல. அப்புறம் அவர் ரசிகர்கள் என்னை கல்ல விட்டு அடிக்கவா?,’ என்றார் ஆதீனம்.

இதை பார்த்த நெட்டிசன்கள். “பரவா இல்லையே.. நல்ல safe- ஆ கேம் ஆடுறேளே” என்று கருத்த்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.