Aiswarya rai: அப்பொழுது முதல் இப்பொழுது வரை உலக அழகி யார் என்று கேட்டால் பெரும்பாலானவர் சொல்வது ஐஸ்வர்யா ராய் என்றுதான். அந்த அளவிற்கு மனதில் இறுக்கமான ஒரு இடத்தை பிடித்தவர். அதன்பின் மணிரத்தினம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதில் இவருடைய நடிப்பு ரசிகர்களை கவர்ந்த நிலையில் கோலிவுட்டில் பெருசாக கவனம் செலுத்தாமல் பாலிவுட் பக்கம் திரும்பினார்.
அங்கு போனதும் கோலிவுட்டை விட பாலிவுட்டில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பினால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இருந்தாலும் தமிழில் கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ண முடியாததால் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் போன்ற படங்களில் நடித்து கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக மக்கள் மனதை கொள்ளையடித்து விட்டார்.
இதற்கு இடையில் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இவர் அம்மாவை உரித்து வைத்தது போல் கொள்ளை அழகுடன் வலம் வருகிறார். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் கருத்து வேறுபாடு உள்ளதால் கூடிய விரைவில் இவர்கள் விவாகரத்து பண்ண போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி வந்தது.
அசிங்கப்பட்ட ஐஸ்வர்யா ராய்
அந்த வகையில் சமீபத்தில் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சண்ட்க்கும் நடந்து முடிந்த கல்யாணத்திற்கு அமிதாப்பச்சன் குடும்பத்துடன் போயிருந்தார். அப்பொழுது அபிஷேக் பச்சனும் போயிருந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் மட்டும் மகளை கூட்டிட்டு தனியாக போயிருந்தார். அப்பொழுது இவர்களுக்குள்ள இருந்த கருத்து வேறுபாடு காரணமாக பிரியப் போகிறார்கள் என்று ஊர்ஜிதம் ஆகியது.
இந்த சூழ்நிலையில் ஆனந்த் அம்பானி கல்யாணத்துக்கு போன இடத்தில் ஐஸ்வர்யாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது ஐஸ்வர்யா ராய் மகளுடன் போன போது எடுத்த புகைப்படத்தில் முன்னாள் காதலனாக இருந்த சல்மான் கான் புகைப்படத்தை இணைத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இவர்கள் ஒன்று சேரப் போகிறார்.
அதனால் தான் அபிஷேக் பச்சனை பிரியப் போகிறார் என்று வதந்திகள் பரவி வருகிறது. இதனை பார்த்து ஐஸ்வர்யா ராய், எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. திருமணமான ஒரு பெண்ணை அதுவும் ஒரு பெண்ணுக்கு தாயாக இருக்கும் என்னைக் குறித்து இப்படி பேசி புரளியை கிளப்புவது ரொம்பவே அருவருப்பாக இருக்கிறது. இந்த சமூகத்தில் வாழ்வதற்கே சங்கடமாக இருக்கிறது என்று ஐஸ்வர்யா ராய் பதிலளித்திருக்கிறார்.
ஆனந்த் அம்பானி கல்யாணத்தில் அசிங்கப்பட்ட ஐஸ்வர்யா ராய்
- அம்பானி வீட்ல கல்யாணம் ரீசார்ஜ் காசு ஏத்துனாங்க
- வெளிநாட்டு பாடகர்களுக்கு 200 கோடி வாரி இறைத்த அம்பானி
- ஆனந்த் அம்பானி கல்யாணத்திற்கு 5000 கோடி செலவு, மொத்த லிஸ்ட்