வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18, 2024

சூசகமாக தோல்விக்கு அவர்தான் காரணம் என கூறிய ஐஸ்வர்யா.. மொத்த பழியையும் தூக்கி சுமக்கும் பிரபலம்

Aishwarya Rajinikanth blamed Anirudh for the negative reviews of the 3 movie: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜெய் பீம் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் இதன் பின் லோகேஷ் உடன்  தலைவர்171 நெல்சன் உடன் ஜெயிலர் 2 என அடுத்தடுத்து கமிட் ஆகியும் உள்ளார் இதற்கிடையே தன் மகள் இயக்கிய லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளார் ரஜினிகாந்த்.

பலத்தை எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்  லால் சலாம் திரைப்படம் கிரிக்கெட் அரசியலை  மையமாக வைத்து இயக்கியிருந்தார் ஐஸ்வர்யா.

இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இருவரும் தன் உறவு முறையான முன்னணி இசையமைப்பாளர் அனிருத் அவர்களை இசையமைக்க  வேண்டாம் என முடிவு செய்துள்ளனர் காரணம் அனிருத் தலை கனத்துடன்  ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வருவதால் தங்கள் படங்களுக்கு செட்டாக மாட்டார் என நிராகரித்து உள்ளனர்.

Also read: இயக்குனராக களம் கண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 4 படைப்புகள்.. அட! பாட்டு, டப்பிங் என கலக்கி இருக்காங்களே

அனிருத் அவர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அறிமுக திரைப்படமான 3  படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். படத்தின் பின்னணி இசை பாடல்கள் அற்புதமாக  வந்திருந்தது இப்பாடலில் இடம்பெற்ற தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது.

இப்பாடலை குறித்து தற்போது மனம் திறந்து உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள், படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் ரசிகர்கள் இடையே நான் சொல்ல வந்த கருத்தை கொண்டு போய் சேர்க்க முடியாமல் வேறு விதமான எதிர்பார்ப்பை கிளப்பி படத்தின்  திரை ஓட்டத்தை வேறு விதமாக சிந்திக்க வைத்து விட்டது அது எனக்கு ரொம்ப வருத்தத்தை உண்டாக்கியது என புலம்பி உள்ளார்.

ஒய் திஸ் கொலவெறி பாடல் வெளிவந்த சமயம்  ஏதோ காதலனை ஏமாற்றி விட்ட காதலி பற்றிய பாடல் என்ற பிம்பத்தை கிளப்பி இருந்தது படத்தின் கதையோ தனக்கு இருக்கும் நோயின் தீவிரத்தான் நாயகியின் நலனுக்காக  அவரை தவிக்க விட்டு தற்கொலை செய்யும் கதாபாத்திரம் நாயகனுடையது.  இந்த செய்தியவே செய்தியை தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் இலைமறை காயாக சூசகமாக கூறி இருக்கிறார். எல்லாம் சரிதான் படம் வெளிவந்து 12 ஆண்டுகள் கழித்து இதை சொல்வதற்கான அவசியம் என்ன வந்தது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also read: திமிர் தெனாவெட்டால் மாமா வீட்டில் மரியாதை இழந்த அனிருத்.. ரஜினியே கூப்பிட்டால் கூட தூக்கி எறியும் வாரிசுகள்

- Advertisement -spot_img

Trending News