பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்த வாரிசு நடிகை.. தற்கொலை செய்து கொண்ட கணவர்

Gossip: தன்னுடைய பேரழகினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிரங்கடித்த நடிகை அவர். அவருடைய அப்பாவும் புகழ் பெற்ற நடிகராவார். சமீபத்தில் இந்த நடிகையைப் பற்றி வெளியான செய்தி ஒன்று ஒட்டுமொத்த திரையுலகிலும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நடிகைக்கு இப்படி ஒரு தொடர்பு இருந்ததா என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

பொதுவாக சினிமா நடிகைகள் என்றாலே ரசிகர்களிலிருந்து, உடன் நடிக்கும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் ஒரு ஈர்ப்பு இருக்கும். ஆனால் இந்த நடிகை கோ காதல் ஏற்பட்டது தன்னிடம் வேலை செய்யும் மேலாளர் மீது. அதுவும் திருமணத்திற்குப் பிறகு இப்படி ஒரு உறவு ஏற்பட்டிருக்கிறது.

Also Read:அர்த்த ராத்திரியில் நடிகையை தேடி செல்லும் நடிகர்.. காதலை தாண்டி சென்ற அந்தரங்க உறவு

நடிகைகள் என்றாலே இது போன்ற விஷயங்கள் சகஜம் தானே என நினைத்தால், இந்த காதல் கதை இந்த அளவுக்கு பேசப்பட காரணம் நடிகையின் மேலாளரும் ஒரு பெண். நடிகையின் அழகில் மயங்கி பார்க்கும் ஆண்கள் எல்லாம் அவர் வசம் ஈர்க்கப்பட, நடிகைக்கு காதல் வந்தது ஒரு பெண்ணின் மீது. அதுவும் கணவர் இருக்கும் பொழுதே.

இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி அது ரகசிய உறவாக மாறி இருக்கிறது. தொடர்ந்து நடிகை அந்த மேலாளர் உடன் தொடர்பில் இருந்து வர, கணவருக்கு இந்த விஷயம் தெரிந்து விட்டது. மனைவியின் இப்படி ஒரு உறவால் மனதளவில் பாதிக்கப்பட்ட நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

பல வருடங்களாக நடிகையின் இந்த மாதிரியான உறவு பற்றியும், அவருடைய கணவரின் தற்கொலைக்கான காரணம் பற்றியும் எந்த செய்தியும் வெளிவராமல் இருந்திருக்கிறது. நடிகையும் எதுவுமே நடக்காதது போல் தன்னுடைய சினிமா வாழ்க்கையை பார்த்துக் கொண்டு, காதல் வாழ்க்கையையும் தொடர்ந்திருந்திருக்கிறார்.

Also Read:பழம் நழுவி பாலில் விழுந்த கதைதான்.. குறும்புக்கார ஹீரோவே கதியென கிடந்த நடிகை

Next Story

- Advertisement -