Home Tamil Movie News சிங்கப்பெண்ணில் மித்ராவின் கைப்பாவையான காயத்ரி, போட்டியாக வரும் துளசி.. மீண்டு வருவாளா ஆனந்தி?

சிங்கப்பெண்ணில் மித்ராவின் கைப்பாவையான காயத்ரி, போட்டியாக வரும் துளசி.. மீண்டு வருவாளா ஆனந்தி?

Singapenne
Singapenne

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் ஆனந்திக்கு அடுத்தடுத்து இரண்டு சவால்கள் காத்திருக்கின்றன. ஆனந்திக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் வந்து நிற்பது அன்பு மற்றும் மகேஷ் தான். மகேஷின் அப்பா ஏற்கனவே மகேஷுக்கு ஏகப்பட்ட கிடுக்கு பிடிகள் போட்டு ஆனந்தி அவனை நெருங்காத அளவுக்கு பார்த்துக் கொள்கிறார்.

இதற்கு முழுக்கவும் காரண கர்த்தாவாக இருந்தது மித்ரா தான். தற்போது அன்புவின் அம்மா அன்புக்கு கொடுத்த நெருக்கடியால் அவனும் ஆனந்தியை வெறுப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறான். அன்பு ஆனந்தியை மனம் மோகம் அளவுக்கு பேசுவது சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்களுக்கே எதிர்பார்க்காத அதிர்ச்சியாக இருக்கிறது.

அன்பு மற்றும் மகேஷ் இரண்டு பேரையும் தாண்டி ஆனந்திக்கு பெரிய தைரியமாக இருப்பது அவளுடைய தோழிகள் தான். அவர்களிடமிருந்தே பிரச்சனை ஆரம்பிக்கிறது என்றால் ஆனந்தி எப்படி அதை தாங்கிக் கொள்ளப் போகிறாள் என தெரியவில்லை.

காயத்ரி தன்னை பெரிய சிக்கலில் இருந்து காத்துக் கொள்ள தற்போது மித்ராவிடம் தஞ்சம் அடைந்து விட்டாள். ஏற்கனவே மித்ராவிடம் 50,000 பணம் வாங்கி இருந்த காயத்ரி மேலும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டிருக்கிறாள்.

மீண்டு வருவாளா ஆனந்தி?

காயத்ரிக்கு உதவி செய்யும் அளவுக்கு எல்லாம் மித்ராவுக்கு பெரிய மனசு இல்லை என்பது நம் எல்லோருக்குமே தெரியும். பணத்தை கொடுத்து ஆனந்திக்கு எதிராக காயத்ரியை வைத்து காய் நகர்த்த மித்ரா போட்டிருக்கும் திட்டம் தான் இது.

அன்பு வை எப்படியாவது கம்பெனிக்கு வர வைக்க வேண்டும் என நேற்று ஆனந்தி வீடு தேடி போயிருந்தாள். அப்போது யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு அன்பு அவளை ரொம்பவும் கோபமாக பேசி அனுப்பி வைத்து விட்டான்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தியின் பெயரில் மகேஷுக்கு ஒரு கடிதம் வருகிறது. ஒரு வேலை அன்பு வை மீண்டும் கம்பெனியில் சேர்க்க ஆனந்தி மகேஷுக்கு கடிதம் எழுதி இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் அன்புவின் அம்மா மற்றும் தங்கச்சி சொந்த ஊர் திருவிழாவிற்காக போகிறார்கள். இவ்வளவு நாள் அன்புவின் அத்தை மகள் இருப்பதாக அவ்வப்போது காட்சிகளில் சொல்லப்படும். ஆனால் உண்மையாகவே இனி வரும் வாரங்களில் துளசி என்னும் கேரக்டரை சீரியலுக்குள் கொண்டு வர இயக்குனர் திட்டமிட்டு இருக்கிறார்.

உண்மையை சொல்ல போனால் அழகன் யார் என்று ஆனந்தி தெரிந்து கொள்வது போல் காட்சிகள் அமைக்கப்படுவது தான் இந்த சீரியலின் ரசிகர்கள் எதிர்பார்ப்பது. தேவையில்லாமல் இந்த அத்தை பெண் கேரக்டரை எல்லாம் உள்ளே கொண்டு வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். ஒரு வேளை ஆனந்தி படும் கஷ்டத்தை புரிந்து கொண்டு முத்து தான் அழகன் என்று ஆனந்தியிடம் சொல்கிறானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.