1. Home
  2. சினிமா செய்திகள்

விருது, விழாக்கள் பொய்யா? விஷால் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த உண்மை வைரலாகுது

விருது, விழாக்கள் பொய்யா? விஷால் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த உண்மை வைரலாகுது

எப்போதுமே தன் கருத்தை வெளிப்படையாகச் சொல்லும் விஷால், இப்போதும் ஒரு முக்கியமான விஷயத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில், அவர் கூறிய சில வரிகள் ரசிகர்களையும் தொழில்துறையையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

விஷால் சொன்னது எளிது ஆனால் ஆழமானது “எனக்கு விருதுகள் மீதான நம்பிக்கை கிடையாது!” என்று தைரியமாக கூறியிருக்கிறார். அது வணிக நோக்கத்துக்காக தான் உருவாக்கப்படுகிறது. நான் தேசிய விருதுகளையும் சேர்த்தே சொல்கிறேன். 7 கோடி மக்களுக்காகச் சிறந்த நடிகர், சிறந்த படம் என்று தேர்வு செய்வது எந்த அளவுக்கு பொருத்தம்?” என்று கூறினார். இது சினிமா விருது விழாக்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் வலுவான கருத்தாக மாறியுள்ளது.

விஷால் மேலும் சுட்டிக்காட்டிய ஒரு முக்கியமான அம்சம் “நீங்க 8 பேரு சேர்ந்து முடிவு செய்தது தான் சிறந்த படம் என சொல்வது BULLSHIT!” என்று. அவர் கூறுகிறார், மக்கள் தான் உண்மையான தீர்ப்பாளர்கள். ஒரு நடிகரின் வெற்றி, ஒரு படத்தின் தாக்கம், அவை எந்த அளவுக்கு மக்களின் மனசை தொட்டிருக்கிறது என்பதால்தான் தீர்மானிக்கப்பட வேண்டும். “மக்கள் சர்வேதான் முக்கியம், விருது அல்ல,” என்ற அவரது சொல் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

அவரின் கருத்து ஒரு கோபத்திலோ அல்லது விரக்தியிலோ இல்லை. “நான் விருது வாங்கினாலும்கூட, அதில் பெருமை இல்லை. அதற்கு பதில், அந்த பணத்தை நல்ல நோக்கத்துக்காகப் பயன்படுத்துவேன்,” என்று கூறிய விஷால், விருதுகளுக்குப் பின் உள்ள commercial politics-ஐ நேராக சுட்டிக் காட்டியுள்ளார். இது ஒரு selfless attitude கொண்ட கலைஞரின் குரல் என்று ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.

விஷாலின் இந்த open statement பலரையும் சிந்திக்க வைக்கிறது. ஏனெனில் இன்று விருதுகள் ஒரு recognition அல்ல, ஒரு event marketing tool ஆக மாறிவிட்டன. சிலர் விருதுகளை வாங்குகிறார்கள், சிலர் அதை influence பண்ணுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் ஏற்கனவே இருந்தன. ஆனால் ஒரு முன்னணி நடிகர் இதை நேராகச் சொல்லி வைப்பது ஒரு தைரியமான நடவடிக்கை. “நடிகரின் மதிப்பு விருதில் இல்ல, மக்களின் இதயத்தில் தான்” என்ற அவரது சொல் பலருக்கு உண்மையை நினைவூட்டுகிறது.

மொத்தத்தில், விஷாலின் இந்த கருத்து சினிமா உலகில் ஒரு புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. “விருது கிடைக்கலன்னா வருத்தப்பட வேண்டாம், பாராட்டை மக்கள் கிட்ட இருந்து வாங்கிக்கோ” இதுதான் அவரது அடிப்படை செய்தி. தன் பிரபலத்தையும், தன்னம்பிக்கையையும் தாண்டி ஒரு கலைஞன் சமூக உண்மையைப் பேசும் போது அதுவே அவரை பெருமை படுத்துகிறது. விஷால் பேச்சு ஒரு விமர்சனம் அல்ல; அது ஒரு உண்மை கலைக்கு விருது தேவையில்லை, கலைஞனுக்கு நம்பிக்கை போதும்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.