Director Arun Kumar: இயக்குனர் அருண்குமார் அடுத்தடுத்த படங்கள் மூலம் கமர்சியல் ஹிட் கொடுத்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு படத்திற்கும் பெரிய வித்தியாசம் இருந்து வருகிறது.
அந்த வகையில் முதுமையிலும் காதல், ஒரு காரின் மீது உள்ள பிரியம் ஆகியவை வைத்து இயக்கிய படம் தான் பண்ணையாரும் பத்மினியும். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாகவும் விஜய் சேதுபதியே வைத்து பெரிய ஹிட் கொடுத்த படம் தான் சேதுபதி. ஒரு நேர்மையான காவல் அதிகாரிக்க வரும் பிரச்சனையை இப்படத்தில் ஏற்படத்தில் வழிகாட்டி இருந்தார்.
சினிமாவில் இயக்குனர் அருண்குமாரின் வளர்ச்சி
இதைத்தொடர்ந்து சித்தார்த்தை வைத்து இயக்கிய படம் தான் சித்தா. இது குழந்தைகளுக்கு நடக்கும் அநீதியும் அதனால் தவறுதலாக மாற்றிக் கொள்ளும் இளைஞனின் கதையை வெளிப்படுத்தி இருந்தார் அருண்குமார்.
இந்த படம் தான் இவரின் திரை வாழ்க்கையை முக்கியமான படமாக பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சித்தா படத்தை பார்த்துவிட்டு தான் அருண்குமாரை தனது படத்தை இயக்குமாறு அழைத்துள்ளார் விக்ரம்.
அதன்பிறகு மாஸ் கூட்டணியில் உருவானது தான் வீரதீர சூரன். இந்த படம் வெளியாவதில் ஆரம்பத்தில் சிக்கல் இருந்தாலும் மாலை தியேட்டரில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.