திரையுலகிற்கு மாடல் அழகியாக அறிமுகமாகி, தற்போது நடிகையாக வளர்ந்து இருப்பவர்தான் நடிகை திவ்யபாரதி. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பணியாற்றியிருக்கிறார்.
மேலும் திவ்யபாரதி தெலுங்கில் ‘பாலி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் ‘பேச்சுலர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக கால்பதிக்க உள்ளார் திவ்யபாரதி.
இந்தப் படத்தை ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நடிகை திவ்யபாரதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் இணையத்தை பற்றி எரிய செய்துள்ளது.
அதாவது மாடல் அழகியான திவ்யபாரதி, தனது கவர்ச்சியான போட்டோக்களை சோஷியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

ஏற்கனவே திவ்யாவின் புகைப்படத்திற்கு பல இளசுகள் ஏங்கித் தவிக்கும் நிலையில், தற்போது திவ்யபாரதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் திவ்யபாரதி ஏகபோகமாக கவர்ச்சியையும் தெளித்திருக்கிறார்.
இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருவதோடு, இணையத்தை பற்றி எரிய செய்துள்ளது.