வியாழக்கிழமை, அக்டோபர் 24, 2024

விஜய் ரசிகர்களை கடுப்பேற்றிய துல்கர்.. அப்படி என்ன பேசினார்

துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டிய புரமோஷன் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு துல்கர் சல்மான் சில விஷயங்களை கூறியுள்ளார்.

மேலும், துல்கர் சல்மானின் ரசிகை ஒருவர் அவரை நேரில் கண்டதும், எக்ஸைட் ஆகி, அழுது, ஓடி சென்று கட்டி அணைத்துக்கொண்டார். இந்த வீடியோ கூட தற்போது வைரலாகி வருகிறது. சமீப காலமாக துல்கரின் படங்கள் ஏதும் திரையரங்ககளில் வெளியாகவில்லை. இந்த படம் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு படமாக இருக்கும் என்று பெருமிதத்துடன் பேசியுள்ளார் துல்கர்.

விஜய் ரசிகர்களை கடுப்பேற்றிய துல்கர்..

நீண்ட நாட்களாக துல்கர் படம் வெளியாகாமல் இருந்ததற்கு அவருடைய உடல் நிலை ஒரு காரணமாக இருந்திருக்கிறது. இந்த வருடம் துவங்கியது முதல், அவருக்கு உடல் நிலை சரியாக இல்லையாம். அதனால் தற்போது வரை இரண்டு படங்களுக்கு மட்டும் தான் டப்பிங் வேலையை முடித்துள்ளாராம்.

இந்த நிலையில் ப்ரோமோஷன் நிகழ்வில் அவர் பேசிய சில விஷயம், ரசிகர்களை குதூகல படுத்தியது. மேலும் ஒரு சில ரசிகர்களை கடுப்பேற்றியது. அவர் கூறியதாவது, “1990-களில் நாங்கள் சென்னைக்கு வந்தோம். அப்போது நான் அதிகமாக நடிகர் ராம்கியின் படங்களை பார்த்திருக்கிறேன். சிறு வயதில் நான் ரசித்த நடிகர்களுடன் இணைந்து தற்போது நடிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். படத்தில் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.”

“‘அமரன்’, ‘பிரதர்’ படங்கள் வருகிறது. அனைத்து படங்களும் வெற்றி பெறவேண்டும். ‘லக்கி பாஸ்கர்’ படத்துக்கு வாய்ப்பு கொடுங்கள்” என்றார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “நான் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன். இந்தப் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரியும் கூட, அஜித்தை வைத்து இயக்க ஆசைப்படுகிறார். அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம் எனக்கு பிடித்த படம்” என்று கூறியுள்ளார். இதை கேட்ட விஜய் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் உள்ளனர்.

- Advertisement -spot_img

Trending News