தமிழ் சினிமாவில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் துஷாரா விஜயன். இப்படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார். துஷாரா விஜயன் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் சென்னை பாஷையை சரணமாக இப்படத்தில் பேசி பெருவாரியான ரசிகர்களை ஈர்த்தார்.
இப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தாலும் காதல் பாசம் அன்பு என அனைத்திலும் தனது முழு நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கும் பக்கபலமாக இருந்தார். படம் வெளிவந்தபோது துஷாரா விஜயனை பலரும் பாராட்டினர். இப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிய அளவில் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன.
![dushara vijayan](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/11/dushra-vijay.jpg)
ஆனால் துஷாரா விஜயன் படத்தின் கதையையும் தனக்கான கதாபாத்திரத்தையும் கேட்டு தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடித்து வருகிறார். நடிகைகள் பொருத்தவரை எப்போதும் அவர்களது சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார்கள்.
அப்படித்தான் துஷாரா விஜயனும் அவரை சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவது மற்றும் படத்தினைப் பற்றிய தகவல் வெளியிடுவது என தொடர்ந்து சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
![dushara vijayan](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/11/dushravijayaan.jpg)
தற்போது இவர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். துஷாரா விஜயன் காரில் அமர்ந்தபடி புகைப்படம் எடுத்துள்ளார் இப்பவே படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் துஷாரா விஜயன் புதிய கெட்டப்பில் அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர். மேலும் தற்போதைய இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது