1. Home
  2. எவர்கிரீன்

ரஜினி படம் குறித்து.. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா உருக்கமான பதிவு

ரஜினி படம் குறித்து.. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா உருக்கமான பதிவு

1995ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியானது தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் திரையரங்குகளில் ரிலீஸான முதல் நாளிலிருந்து பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பாய்ந்தது.

இந்தப் படத்தில் ரஜினிக்கு இணையாக நக்மா, ரகுவரன், தேவன், விஜயகுமார், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரே வாரத்தில் படம் கல்ட்டாக மாறியது. ரஜினியின் மாறுபட்ட ஸ்டைலும், வசனப் பேச்சும் ரசிகர்களை வெறித்தனமாக்கின.
இப்போது இந்த ‘பாட்ஷா’ திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்துள்ளது.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பதிவு

இதையொட்டி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். “ஒரு புகழ்பெற்ற படம் 30 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் தருணம் இது” என அவர் எழுதியுள்ளார்.

மேலும், "'பாட்ஷா'வின் வெற்றிக்கு காரணம் ரஜினி சார் தான். அவருடைய நடிப்பும், திரை ஆளுமையும் அற்புதமானது. அவர் பாட்ஷாவாக நடித்ததல்ல, உண்மையிலேயே பாட்ஷாவாகவே மாறினார்" என தெரிவித்துள்ளார். தற்போது 4K டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் படம் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வெற்றிக்கு பின்னால் இருந்த இயக்க குழுவினரையும் சுரேஷ் கிருஷ்ணா மனமார்ந்த நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார். ஆர்.எம்.வி, நக்மா, ரகுவரன், தேவா, வைரமுத்து, பி.எஸ். பிரகாஷ், ராஜு மாஸ்டர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். “ஒரே ஒரு பாட்ஷா தான்… அது நம்ம பாட்ஷா தான்” என உருக்கமாக கூறியுள்ளார்.

30 ஆண்டுகள் கடந்தும் ரசிகர்களின் மனதில் 'பாட்ஷா' என்ற பெயர் இன்னும் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் மைல்கல் படையாகவும், ரஜினியின் mass கதாநாயக தன்மையை நிரூபித்த வகையிலும் ‘பாட்ஷா’ என்ற படம் என்றென்றும் நினைவில் நிலைத்து நிற்கும்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.