நண்பருடன் கள்ள உறவில் இருந்த மனைவி.. போட்டுத்தள்ள முயற்சித்த நடிகர்

டாப் நடிகராக புகழின் உச்சியில் இருப்பவர் தான் இந்த பிரபலம். இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய செல்வாக்கை வைத்து பல விஷயங்களை செய்பவர்தான் அந்த நடிகர். அதன் காரணமாகவே அவருடைய படங்களில் ஜோடி போட்டு நடிப்பதற்கு பல நடிகைகளும் யோசிப்பார்கள்.

ஆனாலும் அவர் நினைத்தால் நடந்தே ஆக வேண்டும் என்ற ரீதியில் ஹீரோயின்களுக்கு பல கெடுபிடிகளை இவர் கொடுப்பார். இப்படி திரையுலகையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த நடிகர் ஒருமுறை தன் நண்பரையே போட்டுத் தள்ள முயற்சித்து இருக்கிறார்.

அப்போது நடந்த பிரச்சனையில் இவர் மீது வழக்கு கூட பதியப்பட்டது. ஆனால் அதிலிருந்து சாமர்த்தியமாக தப்பிக்க பார்த்த அந்த நடிகர் பல கோடிகளை அதற்காக செலவு செய்திருக்கிறார். அதன் காரணமாகவே அந்த பிரச்சனை காதும் காதும் வைத்த மாதிரி முடிந்திருக்கிறது. ஆனாலும் அந்த விவகாரம் இப்போது வரை பலருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவமாகத்தான் இருக்கிறது.

மேலும் எதற்காக நடிகர் இவ்வளவு பணத்தை வாரி இறைக்க வேண்டும் என்ற கேள்வியும் எழலாம். ஆனால் அந்த விவகாரத்துக்கு பின்னணியில் ஒரு கசமுசா சம்பவம் இருக்கிறது. அதாவது நடிகரின் நண்பராக இருந்த அந்த பிரபலம் அவர் வீட்டுக்குள்ளேயே தன் கைவரிசையை காட்டி இருக்கிறார். என்னவென்றால் அவருடைய மனைவியோடு அவர் கள்ள உறவில் இருந்திருக்கிறார்.

இது தெரிய வந்ததால்தான் நடிகர் நண்பரை போட்டு தள்ள முயற்சி செய்கிறார். அதன் பிறகு இந்த பிரச்சனையை முடித்த அந்த நடிகர் தன் மனைவியையும் கண்டித்து வைத்திருக்கிறார். ஏனென்றால் மிகப்பெரும் செல்வந்தரின் மகளான தன் மனைவியை விடக்கூடாது என்பதற்காகவே அவர் இப்போது வரை இந்த சம்பவத்தை சகித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறாராம்.