தமிழ் சினிமாவில் தற்போது பல ரசிகர்களை தன் கைக்கு வைத்திருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தற்போது சாணி காகிதம் மற்றும் அண்ணாத்த திரைப்படம் உருவாகிக்கொண்டிருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள் அனைத்தும் சமீபகாலமாக வரவேற்பு பெறுவது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. இவரது நடிப்பிற்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் எந்த ஊருக்கு போனாலும் உடனே ஒரு செல்பி புகைப்படத்தை எடுத்து சிறுபிள்ளைத்தனமாக அவரது இணையதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப் படுத்தி வருகிறார்.

தற்போதைக்கு கீர்த்தி சுரேஷ் தான் சினிமாவில் குயினாக உள்ளார். அதுமட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு வருகின்றன. ஆனால் கீர்த்தி சுரேஷ் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களை குஷிப்படுத்த பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது கீர்த்தி சுரேஷ் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் சம்மர் மூடு என பதிவிட்டபடி சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.