தமிழ் சினிமாவில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் கிரண் ராத்தோட். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அஜித் நடிப்பில் வில்லன், சரத்குமார் நடிப்பில் அரசு மற்றும் பிரசாந்துடன் வின்னர் ஆகிய படங்களில் இவருக்கு பெயர் பெற்றுக் கொடுத்தன. படம் வெற்றி அடையாவிட்டாலும் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் அப்போது சினிமாவில் பெரிய அளவில் சினிமா மார்க்கெட் இருந்தது. அதனால் கிரணுக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இவரது நடிப்பில் தமிழில் கடைசியாக உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் சந்தானம் நடிப்பில் உருவாகும் சர்வர் சுந்தரம். இப்படத்தில் இவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை இயக்குனர் கொடுத்துள்ளார் என தகவல் வெளியானது மட்டுமில்லாமல் சந்தானத்துடன் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளார்.
சமீபகாலமாக கிரண் ராத்தோட் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சினிமா நடிகைகள் பொறுத்தவரை பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் அல்லது ஓரிரு நாட்களில் படம் வெளியாவதாக இருந்தாலும் உடனே ஒரு போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு விடுவார்கள்.
![kiran rathod](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/08/kiran-rathod.jpg)
பல நாட்களாக நடிக்காமல் இருக்கும் நடிகைகள் பற்றி ரசிகர்கள் பெரிய அளவில் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் ஒரு புகைப்படம் வெளியானால் அந்த நடிகை யார் என்ன படம் நடித்துள்ளார் என்பதை சமூக வலைதள பக்கத்தில் தெரிந்துகொள்வார்கள். இதுவே படத்தின் புரமோஷனுக்கு சாதகமாக அமைந்துவிடும்.
![kiran rathod](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/08/kiran-5rathod.jpg)
தற்போது கீரன் அவர் சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டது அதுமட்டுமில்லாமல் இந்த வாரம் என்னுடைய மனநிலை தகுந்த மூடு உள்ள வாரம் என குறிப்பிட்டுள்ளார். உங்களுக்கு சந்தோஷமா எனவும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் கண்டபடி பதிவுசெய்து வருகின்றனர்.