1. Home
  2. கோலிவுட்

சத்தமே இல்லாமல் வேறு படத்தை எடுக்கும் அஜித்.. விடாமுயற்சிக்கு எப்போது தான் விடிவு காலம்

சத்தமே இல்லாமல் வேறு படத்தை எடுக்கும் அஜித்.. விடாமுயற்சிக்கு எப்போது தான் விடிவு காலம்
விடாமுயற்சி படத்திற்கு முன்னதாகவே வேறு ஒரு படத்தை எடுத்து வரும் அஜித்.

Actor Ajith: விடாமுயற்சி படத்தை தொட்டதிலிருந்து அஜித்துக்கு ஏழரை சனி பிடித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ஒன்றாக வெளியான நிலையில் விஜய் அடுத்ததாக லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். ஆனால் விடாமுயற்சி படம் இன்னும் தொடங்கிய பாடு இல்லை.

மேலும் வருகின்ற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. துணிவு முடிந்த இத்தனை மாதங்கள் ஆன நிலையில் அஜித் இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன தான் செய்தார் என்பதும் தெரியவில்லை. அவ்வப்போது அவருடைய புகைப்படம் மட்டும் இணையத்தில் வெளியாகிக் கொண்டிருந்தது.

இந்த சூழலில் அஜித் சத்தமே இல்லாமல் வேறுபடத்தை எடுத்து வருகிறாராம். அதாவது விடாமுயற்சி காலதாமதம் ஆகி வருவதால் அதற்குள் மற்றொரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதாவது அஜித் பைக்கில் உலக சுற்றுலா சொல்வதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளாராம்.

இதை தனது அலுவலகத்தில் கொடுத்து எடிட்டிங் செய்து வருகிறாராம். இதில் நூலிலே கூட வெளியில் கசிந்து விடக்கூடாது என மிகவும் கவனமாக இருக்கச் சொல்லி இருக்கிறாராம். இதற்கான காரணம் இரண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதலில் ஓடிடி தளத்திற்கு இந்த வீடியோவை விற்கப் போகிறார் என்று கூறப்படுகிறது.

இது இல்லை என்றால் தனது கம்பெனியின் விளம்பரத்திற்காக பயன்படுத்தப் போகிறாரா என்பது இனிமேல் தான் தெரியவரும். ஆனால் அஜித்தின் இந்த பைக் சுற்று பயண வீடியோ படு பயங்கரமாக தயாராகி வருவதாக அஜித்தின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆகையால் விஜய்யின் லியோ படத்தின் ரிலீஸ் போது கூட இந்த வீடியோ வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இவ்வளவு கமுக்கமாக ஒரு விஷயத்தை அஜித் செய்து வருகிறார் என்றால் கண்டிப்பாக அது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படும். ஆகையால் இதை தொடர்ந்து இனி தான் விடாமுயற்சிக்கு விடிவு காலம் பிறக்க உள்ளது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.