Bigg Boss Bailwan: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எல்லா நிகழ்ச்சிகளையும் விட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கூடுதலாக வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த வருடம் பிக் பாஸ் சீசன் 7 வருகிற அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. எப்பொழுதும் ஒரு வீட்டிற்குள் கிட்டத்தட்ட 18 போட்டியாளர்களை அடைத்து வைத்திருப்பார்கள்.
ஆனால் இந்த முறை ஒரு சின்ன மாற்றம் ஏற்படுத்தும் விதமாக 2 வீடுகள் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இதில் பங்கு பெறுவதற்காக ஒவ்வொரு போட்டியாளர்களை மும்மரமாக தேர்வு செய்து வருகிறார்கள். இவர்கள் தேர்வு செய்கிறார்கள் என்றால் சும்மா சாதாரண ஆளாவாக இருப்பார்கள்.
சண்டைக்கு, சர்ச்சைக்கும் ஊறிப் போனவர்களை தேடித்தேடி அழைத்து வருவதை இவர்களுடைய முக்கிய வேலையாக இருக்கும். அதில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க விஷயங்களை நோண்டி நொங்கு எடுத்து வெளிப்படையாக யூடியூப் சேனலில் பேசி வருபவர் பயில்வான். இப்படிப்பட்ட இவரை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்புவதற்கு முடிவெடுத்து இருக்கிறார்கள்.
ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ரேகா நாயரிடம் பேசப்பட்டு விட்டது. இவர் முடிவான நிலையில் தற்போது பயில்வானையும் உள்ளே அனுப்புகிறார்கள் என்றால், அங்கே இனி வாயால் சண்டை நடக்காது. களத்தில் இவர்கள் இருவருமே இறங்கி அடிப்பதில் ஒன்னுக்கு ஒண்ணும் சலச்சவங்க இல்ல. அந்த வகையில் இவர்கள் இருவருக்குமே ஏற்கனவே நடு ரோட்டில் வாக்குவாதம் முக்தி கை கலப்பு ஆயிருக்கிறது.
மேலும் இவர்கள் இருவருமே சர்ச்சையாக பேசுவதை மட்டுமே வழக்கமாக வைத்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்கள் இருவரையும் ஒரே கூண்டில் அடைத்து இவர்கள் போடும் சண்டையை வேடிக்கை பார்ப்பதற்காக விஜய் டிவி இந்த ஏற்பாடு செய்திருக்கிறது.
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சையும் சண்டைக்கும் பஞ்சமே இருக்காது. தற்போது ரேகா நாயகர் காலில் சலங்கை கட்டி ஆடுவதற்கு ஏற்ற மாதிரி பயில்வானையும் அனுப்பி ரத்த கலவரத்தையே உண்டாக்கப் போகிறார்கள். இதனால் இந்த பிக் பாஸ் சீசன் 7 தாறுமாறாக சூடு பிடிக்கப் போகிறது.