தனுஷின் நடிப்பில் வாத்தி திரைப்படம் உருவாகி இருக்கிறது. விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் இப்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த திரைப்படம் பீரியட் கால படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இவர் ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடித்து வருகிறார். ஆனால் அது குறித்த எந்த விதமான அப்டேட்டும் வெளியாகாத நிலையில் தனுஷ் அவரை சைலண்ட்டாக தன்னுடைய படத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
ஏற்கனவே கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது டிசம்பர் மாதத்தில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது. அதில் தான் சிவராஜ்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட இருக்கிறதாம். ஆனால் அவருடைய கேரக்டர் பற்றிய தகவல்களை பட குழு ரகசியமாக வைத்துள்ளது.
1980களில் நடக்கும் கதையாக உருவாகும் இந்த கேப்டன் மில்லர் ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதில் தனுசுடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சிவராஜ் குமார் இந்த படத்தில் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக ஒரு திரைப்படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். அந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிகர் விஷ்ணு விஷாலும் நடிக்கிறார். அவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.
மனைவியின் இயக்கத்தில் நடிக்கும் ஹீரோவை தனுஷ் தன்னுடைய படத்திற்காக தேர்ந்தெடுத்துள்ள நிலையில் தற்போது மாமனார் பட வில்லனையும் தன் பக்கம் வரவழைத்துள்ளார். இப்படி அவர் தன் மனைவி மற்றும் மாமனாரிடம் போட்டி போட்டு வருவது தான் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் மிகப்பெரிய சம்பவத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.