நீ ஒரு வண்டு என அனிருத்தை திட்டிய நடிகை.. ஆசையாய் அழைத்தவருக்கு அடி விழாத குறை தான்

Singer Scolded Anirudh: பொதுவாக வண்டுவின் குணாதிசயம் என்பது பூவிலுள்ள தேனை குடித்துவிட்டு எஸ்கேப் ஆகி விடுவது தான். அதைப்போல நடிகை ஒருவரை பயன்படுத்திவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் அனிருத் என்ற உண்மை ஊர் உலகமே அறிந்தது தான்.

ஆண்ட்ரியா ஜெரோமி நடிகை என்பதையும் தாண்டி நன்றாக பாடக்கூடிய பாடகி. இவர் தன் வாழ்க்கையில் திறமைகள் அனைத்தும் அடிபடும் அளவிற்கு பல சர்ச்சைகளில் சிக்கி சீரழித்துக் கொண்டார். சமீபத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட பெரும்புள்ளி ஒருவர் ரன் வாழ்க்கையில் விளையாடி ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருந்தார்.

இப்படி பல இன்னல்களை சந்தித்த ஆண்ட்ரியா கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் மறந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். மீண்டும் அவரை தன்னுடன் பாட வைப்பதற்காக இசையமைப்பாளர் அனிருத் அழைத்துள்ளார். அதற்கு அவரை அடிக்காத குறையாய் செம டோஸ் விட்டுள்ளார் ஆண்ட்ரியா.

ஒரு காலகட்டத்தில் ஆண்ட்ரியா மற்றும் அனிருத் இருவரும் ஓவர் நெருக்கம் காட்டி வந்தனர். அவர் இசையமைக்க இவர் பாடுவதுமாய் ஓவர் நெருக்கத்தில் இருந்த போட்டோக்கள் பலவற்றை பாடகி சுசித்ரா வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

அதன் பின் அனிருத் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் பிரிந்தனர். அதற்கு ஆண்ட்ரியா தரப்பில் இருந்து அனிருத் வயது மிகவும் கம்மி அதனால் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என பல விஷயங்கள் வெளியே வந்தது. பின்னர் இருவரும் தனித்தனியாய் தங்களுடைய வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.

மீண்டும் இப்பொழுது அனிருத் அவரை தன் இசையில் பாடுவதற்கு அழைத்து மொக்கை வாங்கி உள்ளார். மலரிடமிருந்து எப்படி வண்டு தேனை உறிஞ்சி விட்டு எஸ்கேப் ஆகி விடுமோ அதை போல் குணம் கொண்டவர்தான் அனிருத் என்று அவர் அழைத்ததற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாராம் ஆண்ட்ரியா.