கமலுக்கு செக் வைக்கும் சிம்பு.. மண்டையை பிய்த்துகொள்ளும் மணிரத்தினம்!
Kamal and Simbu: விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கமல் மின்னல் வேகத்தில் அடுத்தடுத்த படங்களை ரிலீஸ் பண்ணுவார் என்று எதிர்பார்த்தால் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. விக்ரம் படம் வந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் இப்பொழுது வரை எந்த படமும் வெளிவரவில்லை. ஆனால் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதாவது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் பிரபாஸ் நடித்துக் கொண்டிருக்கும் கல்கி படத்தில் வில்லன் கேரக்டரிலும் நடித்திருக்கிறார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே எப்பொழுது வெளிவரும் என்று தெரியாத நிலையில் தான் இருக்கிறது. இதனை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதில் இவருடன் சேர்ந்து முக்கியமான கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் கமிட்டாகி இருந்தார். ஆனால் துல்கர் சல்மான் மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் இதற்கு நேரத்தை செலவழிக்க முடியாது என்று விலகி விட்டார். பிறகு இவருக்கு பதிலாக சிம்புவை நடிக்க வைக்கலாம் என்று மணிரத்தினம் முடிவெடுத்தார். ஆனால் கமல் வேண்டாம் அவர் வந்துவிட்டால் சூட்டிங் ஒழுங்கா போகாது என்று சொல்லியிருக்கிறார். அதற்கு மணிரத்தினம் நான் சொன்னா சிம்பு கேட்பார் என்று சொல்லி கமலை சமாளித்து விட்டார்.
