தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிரபலமாக இருக்கிறார். கோலிவுட்டில் தற்போது நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கக்கூடிய ஒரே நடிகை என்றால் நயன்தாரா தான்.
ஆனால் ஆரம்ப காலத்தில் கேரளாவில் நயன்தாரா லோக்கல் தொலைக்காட்சிகளில் பணிபுரிந்தவர். அதன் பிறகு மனசினக்கரே ஜெயராம் படத்தில் தான் நயன்தாரா அறிமுகமாகியுள்ளார். அதன் பிறகு தமிழில் நயன்தாரா ஐயா படத்தில் நடிப்பதற்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இயக்குனர் ஹரி ஐயா படத்தில் நடிப்பதற்கு ஒரு குடும்ப பாங்கான பெண்ணை தேடியுள்ளார். அப்போது நயன்தாரா நடிக்க ஆசைப்பட்டு பார்த்திபன் இயக்கிய ‘குடைக்குள் மழை’ என்ற படத்திற்காக ஆப்ஷனில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார்.
ஆடிஷன் பண்ணும்போது நயன்தாராவை பார்த்து, தனது உதவியாளரிடம் வயது 20 ஆனாலும் மூஞ்சி முத்தின மாதிரி இருக்கிறது. எனக்கு இந்த பொண்ணு வேண்டாம் இளமையாக வேண்டும் என்று அனுப்பிவிட்டார்.
வேறுவழியில்லாமல் எங்கு செல்வது என்று தெரியாமல் கேரளா செல்ல திட்டமிட்ட நயன்தாராவிடம் பார்த்திபன் உதவியாளர், முக்கியமான இயக்குனர் படத்தில் நடிக்க ஆடிஷன் நடைபெறுகிறது என்று கூற அவர் சென்றிருக்கிறார். அப்படிதான் நயன்தாராவிற்கு ஐயா படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்தில் தாவணியில் என்று கொடுத்த நயன்தாரா இப்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக தமிழ்நாட்டின் ராணி போல வலம் வருகிறார். அன்று முதல் இன்று வரை நயன்தாராவிற்கு தொடர்ந்து தமிழ் ரசிகர்கள் ஆதரவு கொடுத்துக்கொண்டு வருகின்றனர்.