பிட்டு துணியில் டிரஸ் தச்ச ராஷ்மிகா.. விருது விழாவில் அரங்கேறிய கூத்து

நேஷனல் க்ரஷ் நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் மாட்டிக்கொள்வார். அதிலும் அவர் அணியும் கவர்ச்சி உடை தான் பல பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு விருது வழங்கும் விழாவிற்கு அவர் அணிந்து வந்திருந்த உடை கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

தெலுங்கு, தமிழ் என பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா கடந்த வருடம் பாலிவுட் திரை உலகிலும் அறிமுகமானார். அதில் அமிதாப்பச்சனுடன் அவர் நடித்திருந்த குட்பை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது அப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற விருதை ஜீ விருது விழாவில் இவர் தட்டிச் சென்றுள்ளார்.

அப்போது அந்த விருதினை பெறுவதற்காக அவர் அணிந்து வந்திருந்த ஆடை பயங்கர கவர்ச்சியாக இருந்தது. எப்போதுமே கிளாமர் டிரஸ் அணிந்து தரிசனம் கொடுக்கும் ராஷ்மிகா இப்போது இப்படி ஒரு ஆடையில் வந்தது சில விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த அளவுக்கு அந்த டிரஸ் படுமோசமாக இருந்தது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

கவர்ச்சி தூக்கலாக விருது வழங்கும் விழாவிற்கு வந்த ராஷ்மிகா

rashmika-manthana
rashmika-manthana

அந்த வகையில் பிகினி உடை போன்ற ஒரு கருப்பு நிற ஆடையை தான் அவர் அணிந்து வந்திருந்தார். பார்ப்பதற்கு ஏதோ பிட்டு துணியில் தைத்தது போல் இருந்த அந்த உடையை இப்போது நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இதை விட கேவலமா யாராலயும் டிரஸ் போட முடியாது என்ற ரீதியிலும் பேச்சுக்கள் கிளம்பியுள்ளது.

அந்த அளவிற்கு அந்த உடையில் ராஷ்மிகா தொடையழகு தெரியும்படி இருந்தார். இது கூட பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு அவருடைய முன்பகுதி இருந்தது. இப்படி ஒரு கண்றாவியான ஒரு உடையை அணிந்து கொண்டு அவர் போஸ் கொடுத்ததை பார்க்க ரசிகர்கள் படு கேவலமாக அவரை கிழித்து வருகின்றனர்.

அந்த வகையில் ராஷ்மிகா அணிந்து வந்திருந்த அந்த கருப்பு நிற உடை தான் தற்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் சில ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்து கிண்டலடிக்கும் கதையும் அரங்கேறுகிறது. பேஷன் என்று நினைத்துக் கொண்டு இப்படி கவர்ச்சி தூக்கலாக விருது வழங்கும் விழாவிற்கு வந்த ராஷ்மிகா இதன் மூலம் அடுத்த சர்ச்சைக்கு அஸ்திவாரம் போட்டுள்ளார்.