புஷ்பா 2 ஆல் எகிறிய மார்க்கெட்.. சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய ராஷ்மிகா

rashmika
rashmika

Rashmika Mandanna : நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை அதிகப்படியாக உயர்த்தி இருக்கிறது இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழில் விஜய்யின் வாரிசு படத்தில் ராஷ்மிகா நடித்திருந்தார்.

விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற தனது கனவை இப்படத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டார். இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடித்திருந்தார்.

அப்போது இந்த படத்தில் அவரது சம்பளம் 3 கோடியாக இருந்தது. அடுத்ததாக புஷ்பா 2 படத்திலும் ராஷ்மிகா நடித்திருந்தார். இப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் அபாரமாக அமைந்திருந்தது.

சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா மந்தனா

அதோடு இந்த படத்திற்கு கிட்டத்தட்ட 12 கோடி சம்பளத்தை ராஷ்மிகா பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இப்போது ஆயிரம் கோடி வசூலை புஷ்பா படம் எட்டி இருக்கிறது.

ஆகையால் இந்த படத்தில் நடித்த பிரபலங்கள் எல்லோருமே தனது சம்பளத்தை அதிகப்படியாக கூட்டி இருக்கிறார்கள். அதன்படி ராஷ்மிகாவும் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.

தற்போது புஷ்பா 2 வுக்கு 12 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் தன்னுடைய அடுத்த படத்திற்கு நான்கு கோடி சம்பளத்தை உயர்த்து 16 கோடி கேட்கிறார். மேலும் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.

ஏனென்றால் இப்போது ராஷ்மிகாவுக்கு அந்த அளவுக்கு மார்க்கெட் இருக்கிறது. ஆகையால் டோலிவுட், பாலிவுட் என எல்லாவற்றிலும் ராஷ்மிகா கலக்கி வருகிறார்.

Advertisement Amazon Prime Banner