ரோஜா மகளிடம் படங்களில் நடிப்பீர்களா என கேட்ட ரசிகர்.? தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் போல!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் பிடித்துப்போன நடிகையாக இருந்தவர் ரோஜா. செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமான ரோஜா ஒன்பது வருடம் கழித்து ஆர்கே செல்வமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவரது கணவரும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் படங்கள் பணியாற்றியுள்ளார். இவர் புலன்விசாரணை கேப்டன் பிரபாகரன் செம்பருத்தி மற்றும் கண்மணி போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது இவர்கள் பெரிய பெண்ணாக உள்ளதால் பல தயாரிப்பாளர்களும் படையெடுத்து வீட்டிற்கு சென்று விட்டனர். உங்கள் பெண் படத்தில் நடிப்பதாக இருந்தால் அது என்னுடைய படத்தில் தான் நடிக்க வேண்டும் என பலரும் பாசமான கட்டளையை போட்டு வருகின்றனர்.

roja-daughter-cinemapettai
roja-daughter-cinemapettai

ஆனால் ரோஜாவின் மூத்த மகள் அனுஷ் மல்லிகா சமூக வலைதள பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதாவது அந்த ரசிகர் நீங்கள் படத்தில் நடிப்பீர்களா என கேட்டுள்ளார்.

திரையுலகில் பணியாற்றிய வீட்டில் பிறந்து விட்டு அவர் அமைதியாக இருப்பார அந்த ரசிகரின் கேள்விக்கு எனக்கு படத்தில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறது என கூறியுள்ளார். இதனால் விரைவில் அவர் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

- Advertisement -