Suchithra: அமலா பால் விவாகரத்துக்கு காரணம் இதுதான்.. குடியை கெடுத்து குளிர் காய்ந்த தனுஷ்

Suchithra: அடுத்தவன் குடியை கெடுத்தா, தன் குடி தானே கெட்டுப் போகும் என்பதற்கு சிறந்த உதாரணமாகிவிட்டார் தனுஷ். கடந்த இரண்டு நாட்களாக தனுஷின் பெயர் சமூக வலைத்தளங்களில் டேமேஜ் ஆகி கொண்டிருக்கிறது.

நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும் என்ற விஜய் வசனத்தின் படி எட்டு வருஷத்திற்கு முன்னாடி சைலன்ட் மோடில் இருந்த சுசித்ரா, இப்போ வயலெண்ட் மோடில் இறங்கி இருக்கிறார்.

சுசித்ரா மனநிலை சரியில்லாத பேசிக் கொண்டிருக்கிறார் என்று இந்த விஷயங்களை எல்லாம் சாதாரணமாக கடந்து போக முடியவில்லை. இதற்கு காரணம் அவருடைய பேச்சில் அவ்வளவு தெளிவு தெரிகிறது.

பிக் பாஸ் நான்காவது சீசன் இல் அவர் கலந்து கொண்ட போது மனரீதியாக அவருக்கு ஏதோ பிரச்சனை என்பது நன்றாகவே தெரிந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக அவர் கொடுத்து வரும் பேட்டிகளை உற்று கவனித்தால் தெள்ளத் தெளிவாகப் பேசுகிறார் என்பது நன்றாகவே புரிகிறது.

கோலிவுட்டில் நடக்கும் பல பிரச்சினைகளை பற்றி பேசிய சுசித்ரா போற போக்கில் அமலா பாலுக்கு எதனால் விவாகரத்து ஆனது என்பதையும் தெளிவு படுத்தி விட்டார். அமலா பால், ஏ எல் விஜய் விவாகரத்திற்கு காரணம் தனுஷ் தான் என்பது பல வருடங்களாக பேசப்பட்டு வருகிறது.

இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட நெருக்கமான உறவு தான் இந்த விவாகரத்திற்கு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது சுசித்ரா வேறொரு காரணத்தை சொல்லி இருக்கிறார். அமலாபால் திருமணத்திற்கு பிறகும் பார்ட்டிகளில் கலந்து கொண்டார், அதுதான் இந்த விவாகரத்திற்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது.

அமலா பால் விவாகரத்துக்கு காரணம்

தனுஷ் கேங் உடன் அமலாபால் பார்ட்டி பண்ணுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அப்படி அவர் கலந்து கொண்ட ஒரு பாட்டில் போதை பொருள் கலந்து கொடுத்து தனுஷ் கேங் அவரை பிராங்க் பண்ணியிருக்கிறார்கள்.

போதையில் இருந்த அமலா பாலை டேபிள் மேல் ஏறி நின்று ஆட சொல்லி ரகளை செய்து அதை வீடியோவும் எடுத்து இருக்கிறார்கள். தொடர்ந்து அந்த வீடியோவை வைத்து பிளாக் மெயில் பண்ணி, பார்ட்டிகளுக்கும் வர வைத்து இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் இந்த விஷயம் ஏஎல் விஜய்க்கு தெரிய வரவே இவர்களது திருமண உறவு முறிந்து இருக்கிறது. திருமணம் தான் கை கொடுக்கவில்லை, எப்படியாவது சினிமாவையாவது கையில் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து தான் தனுஷ் கேங் செய்த அட்டகாசத்தை அமலாபால் வெளியில் சொல்லவில்லை என்று சுசித்ரா தன்னுடைய பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

Next Story

- Advertisement -