சுந்தர் சி, வடிவேலுக்கும் சூனியம் வச்சாச்சு.. 3 பேருக்கு முருக பக்த ஹீரோ வைத்த செய்வினை

பிரபல நடிகர் ஒருவர் முருகர் மீது அலாதிய பக்தி கொண்டவர். வாரம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இவரை சிறுவாபுரி கோயில்களில் பார்க்கலாம். இப்பொழுது படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அந்த நடிகர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். கடந்த மூன்று நாட்களாக சமூக வலைத்தளங்களில் இவர் தான் ஹாட் டாப்பிக்.

தன்னை பிடிக்காதவர்களுக்கு இவர் செய்யும் சூனியம் தான் ஹைலைட். ஏற்கனவே இவரிடம் வேலை பார்த்த பல பேர் இவரை பற்றிய உண்மைகளை புட்டு புட்டு வைக்கின்றனர். அதாவது முருகனிடம் வேண்டிக் கொண்டு இவர் செய்யும் ஒரு விதமான செய்வினை தான் அவர்களை உண்டு இல்லை என்று பண்ணிவிடுமாம்.

3 பேருக்கு முருக பக்த ஹீரோ வைத்த செய்வினை

சமீபத்தில் அந்த நடிகர் மூன்று பேரை திட்டி தீர்த்து முருகன் கோவிலில் எலுமிச்சை குத்தி ஒரு விதமான சூனியம் செய்ததாக மொத்த கோடம்பாக்கமும் பரபரப்பில் உள்ளது. இதை அந்த நடிகருடன் நெருக்கமாக இருக்கும் ஒரு அசிஸ்டன்ட் கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு நடிகரை வம்பிழுத்த அந்த மூன்று பேருக்கும் தான் இப்பொழுது எலுமிச்சை பழம் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அந்த நடிகர் ஒருமுறை சந்தானத்தின் பெயரைச் சொல்லி எலுமிச்சம்பழம் குத்தியதாக ஒரு தகவல். இப்பொழுது சந்தானம் அந்த அளவிற்கு படத்தில் ஜொலிப்பதில்லை. சமீபத்தில் கூட சுந்தர் சி மற்றும் வடிவேலு இருவரும் இணைந்து ஒரு பணம் பண்ணுவதால். இருவருக்கும் சேர்த்து இரண்டு எலுமிச்சம் பழங்கள் சூலாயுதத்தில் குத்தப்பட்டுள்ளது.

சுந்தர் சி மற்றும் வடிவேல் இணையும் படத்தில் அந்த நடிகரும் முதலில் நடிப்பதாகத்தான் ஸ்கிரிப்ட் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதன்பின் சுந்தர் சி என்ன நினைத்தார் என்று தெரியவில்லை அந்த நடிகருக்கு படத்தில் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் தான் இந்த படுபாதக செயலில் இறங்கிவிட்டார் அந்த நடிகர்.

Trending News

- Advertisement -spot_img