வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18, 2024

புத்தாண்டு மது விற்பனையில் மலைக்க வைத்த ‘குடிமகன்’கள்.. சென்னையில் மட்டும் இத்தனை கோடியா.?

உலக நாடுகள் எதில் எதில்லோ சாதனை படைத்து வரும் நிலையில் தமிழ்நாடு மட்டும் டாஸ்மாக்கில் தான் சாதனை படைத்து வருகிறது என்றே கூறலாம். அந்த அளவிற்கு டாஸ்மாக்கில் தான் அதிக வருமானத்தை ஈட்டி வருகிறது அரசாங்கம்.

மது வீட்டிற்கும் உடலுக்கும் கேடு என பாட்டில் எழுதி வைத்தது மட்டுமில்லாமல் அதனை விற்பனை செய்து வருகிறது அரசாங்கம். தமிழ்நாட்டில் அரசாங்கத்திற்கு அதிக வருமானத்தை கொடுக்கக் கூடியது என்றால் அது டாஸ்மாக் தான்.

ஆங்கில புத்தாண்டையொட்டி முந்தைய ஆண்டுகளை விட தற்போது டாஸ்மாக் கடையில் அதிகமாக மதுபானங்கள் விற்றுள்ளனர் கிட்டத்தட்ட 159 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

tasmac
tasmac

இது கடந்த ஆண்டை விட 9 கோடி ரூபாய் அதிகமாக மது விற்பனையாகி உள்ளது. சென்னையில் 48 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் தல 28 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. முதலமைச்சரின் சொந்த ஊரான சேலத்தில் 26 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

- Advertisement -spot_img

Trending News