Serial: சின்னத்திரை பொருத்தவரை சீரியல் தான் மக்கள் மனதில் நிலையான ஒரு இடத்தை பிடித்திருக்கிறது. ஏதாவது ஒரு நாளில் சீரியலை மிஸ் பண்ணி விட்டால் அதை ஃபோனில் பார்த்த பிறகு தான் மத்த வேலை என்பதற்காக ஒவ்வொரு குடும்பங்களும் சீரியலுக்கு வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
அதனால் தான் சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஏகப்பட்ட சீரியல்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கு இடையில் சமீப காலமாக சீரியல்கள் கொஞ்சம் டல் அடித்தும் அரைச்ச மாவை அரைத்து நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
அந்த வகையில் மூன்று சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எந்த சீரியல்கள் அதிகமான குளறுபடிகளை ஏற்படுத்தி சொதப்பிக் கொண்டு வருகிறது என்பதை பார்க்கலாம். டிஆர்பி ரேட்டிங்கில் எப்படி சன் டிவி முதலிடத்தில் இருக்கிறதோ, அதே மாதிரி நெகட்டிவ் விமர்சனங்களையும் சன் டிவி சீரியல் தான் பெற்று வருகிறது.
அந்த வகையில் டாப் இடத்தில் இருந்த எதிர்நீச்சல் மற்றும் கயல் சீரியல் எந்த மாதிரி கதைகளை கொண்டு வருகிறோம் என்பதை இயக்குனர் மறந்து குழப்பத்திலேயே சீரியல் எடுப்பது போல் இருக்கிறது. எங்கே ஆரம்பித்தோம் எதை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதை மறந்து கதையே சொதப்புகிறார்கள்.
முக்கியமாக எதிர்நீச்சல் சீரியல் எதை நோக்கி கதை செல்கிறது என்று பார்ப்பவர்களுக்கு புரியவில்லை, நாடகத்தை எடுக்கும் இயக்குனர் அவர்களுக்கும் புரியவில்லை. அந்த அளவிற்கு தான் எதிர்நீச்சல் தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லாமல் ஓட்டிக்கொண்டு வருகிறார்கள்.
அடுத்ததாக கயல் சீரியலில் இதுவரை கயலுக்கு வெளியில் இருந்து தான் பிரச்சனை வந்தது. ஆனால் அதையே காட்டிட்டு இருந்தால் போரடிக்கும் என்பதற்காக இதுவரை கயல் வீட்டில் அப்பாவியாக இருந்த அண்ணி தற்போது மொத்த வன்மத்தை காட்டும் விதமாக வில்லியாக மாறி கதையை வீணாக்கி விட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் பாக்கியலட்சுமி மற்றும் சிந்து பைரவி சீரியல்களும் வேஸ்ட் என்று சொல்வதற்கு ஏற்ற மாதிரி கதை பார்ப்பவர்களை வெறுப்பேற்றி வருகிறது. அடுத்ததாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியல் நல்லா போய்க்கொண்டிருந்த நிலையில் புதுசாக விஜி என்ற கதாபாத்திரத்தை உள்ள கொண்டு வந்து முழுக்க முழுக்க நெகட்டிவ் கதைகளை காட்டி வருவது போல் இருக்கிறது.
இப்படி முக்கியமான மூன்று சேனல்களிலும் இந்த ஐந்து சீரியல்கள் சொதப்பி வருவதால் சீரியல் மீது இருந்த ஒரு எதிர்பார்ப்பு பாழாகிக் கொண்டே வருகிறது. இதனால் இந்த டம்மியான ஐந்து சீரியல்களை முடித்துவிட்டு வரிசையில் இருக்கும் புது சீரியல்களை கூடிய சீக்கிரம் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.