எதிர்நீச்சல் 2 சீரியலில் ஜெயிலுக்குள் போகும் குணசேகரன்.. ஈஸ்வரியின் நிலைமை, ஜனனி எடுத்த முடிவு

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், தர்ஷன் மூலம் எப்பொழுதுமே பாதிக்கப்பட்டிருப்பது ஈஸ்வரி தான். தற்போது தர்ஷனுக்கு புத்தி தெளிந்து குணசேகரன் சகவாசம் வேண்டாம் என்று கொடைக்கானல் பக்கம் ஓடிவிட்டார். ஆனால் இதனால் கஷ்டப்படுவது ஈஸ்வரி தான். அதாவது ஈஸ்வரி தான் தர்ஷனை எங்கேயோ மறைத்து வைத்திருக்கிறார் என்று குணசேகரன் கதிர் நம்புகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் ஜீவானந்தம் கஸ்டடியில் தான் தர்ஷன் இருக்கிறார் என்று குணசேகரன் நினைத்த நிலையில் விசாலாட்சி கூப்பிட்டு ஈஸ்வரியை கேட்கிறார். ஈஸ்வரி, தர்ஷனுக்கும் ஜீவானந்தம் எந்தவித சம்பந்தமும் இல்லை, அதனால் அவரை தயவு செய்து தொந்தரவு பண்ண வேண்டாம். ஏற்கனவே என்னால் அவருடைய மனைவி இறந்து போய் இருக்கிறார்.

மறுபடியும் தொந்தரவு பண்ணும் விதமாக எதையும் பண்ண வேண்டாம் என்று சொல்லி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிய நிலையில் விசாலாட்சி, சாமி முன்னாடி சத்தியம் பண்ணு என்று கேட்கிறார். ஈஸ்வரியும் விசாலாட்சி கேட்டபடி சத்தியம் பண்ணிய நிலையில் எல்லோரும் சேர்ந்து ஈஸ்வரியை டார்ச்சர் பண்ணும் விதமாக மனதளவில் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

சக்தியும் புரிந்து கொள்ளாமல் ஈஸ்வரிடம் வந்து கேட்டதால் ஈஸ்வரி மனமடைந்து போய்விட்டார். இதனால் சுயநினைவை இழந்த ஈஸ்வரி மயக்கம் போட்டு விடுகிறார். ஈஸ்வரியின் நிலைமையை பார்த்தும் மனது இறங்காமல் குணசேகரன் அடாவடித்தனமாக பேசிக் கொண்டிருந்த நிலையில் ஜனனி ஆவேசமாக பொங்க ஆரம்பித்து விட்டார். உங்க அராஜகத்திற்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

இனியும் இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என்று வழக்கம் போல் வாய்சவடால் விட ஆரம்பித்து விட்டார். ஆனால் இவர்களிடம் ஒரு துருப்புச்சீட்டு இருக்கிறது என்பதை மறந்து விட்டார்கள். அந்த வகையில் ஜனனி, குணசேகரன் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் விதமாக பரோலில் வந்திருக்கும் குணசேகரன் மூலம் ஈஸ்வரிக்கு ஆபத்து என்று குற்றவை மூலம் சொன்னாலே போதும்.

பரோலில் வந்திருக்கும் குணசேகரன் ஒரேடியாக ஜெயிலில் களி சாப்பிட வேண்டிய நிலைமை வந்துவிடும். அந்த வகையில் அடுத்து ஜனனி எடுக்க போகும் முடிவு இதுவாகத்தான் இருக்கப்போகிறது. இன்னொரு பக்கம் வீட்டில் என்ன பிரச்சனை நடக்கிறது என்பதை பற்றி யோசிக்காமல் தர்ஷன் கொடைக்கானலில் இருக்கிறார். அங்கே பார்கவி அப்பா, தர்ஷனை பார்த்ததும் பயத்தில் வீட்டிற்கு போய் மறைந்து கொண்டார்.

ஆனாலும் இவர்களை தேடி வரும் சக்தி கதிர் பிரச்சனைகளை பண்ணப் போகிறார்கள். அப்பொழுது அனைவரையும் காப்பாற்றும் விதமாக ஜீவானந்தம் என்டரி கொடுக்கப் போகிறார்.