பாண்டியனிடம் பற்ற வைத்த பழனிவேலுவின் மனைவி.. குறுக்கே விழுந்த மீனா, எதிர்த்து பேசும் கதிர்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிருக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க வேண்டும் என்று நினைத்த ராஜி, நடனமாடி இரண்டாவது பரிசை பெற்றுவிட்டார். திரும்பி எல்லோரும் சேர்ந்து காரில் வரும் பொழுது இதை எப்படி மாமாவிடம் சொல்லப் போகிறோம் என்று எனக்கு தெரியவில்லை என கோமதியிடம் ராஜி சொல்கிறார்.

அதற்கு கோமதி ஆடும் போது ஒன்னும் தெரியல, நான் வேண்டாம் என்று சொல்லும் போதும் கேட்கவில்லை இப்ப வந்து என்னிடம் கேளு என சொல்கிறார். அதற்கு மீனா சமாளித்துக் கொள்ளலாம் வாங்க என்று சொல்லி வீட்டிற்கு அனைவரும் வருகிறார்கள். ஆனால் அதற்குள்ளே பாண்டியனுக்கு தெரிந்து விட்டது.

இதற்கு காரணம் ராஜி ஆடின வீடியோ வைரலாகி வந்த நிலையில் அதை பழனிவேலுவின் மனைவி சுகன்யா பார்த்து விடுகிறார். ஏற்கனவே சுகன்யாவுக்கு இந்த குடும்பத்தை ரெண்டாக்கி பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தான். அதனால் ராஜி ஆடின வீடியோவை பாண்டியனிடம் காட்டி பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்று முடிவு பண்ணி வீடியோவை காட்டி விடுகிறார்.

பாண்டியனும் அந்த வீடியோவை பார்த்து ரொம்ப கோபப்பட்டு நிற்கிறார். அப்பொழுது வீட்டிற்குள் நுழைந்த அனைவரும் என்னாச்சு ஏன் எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள் என்று கேட்கிறார். அதற்கு பாண்டியன் ஆடுன வீடியோவை காட்டி இது என்ன கூத்து, கோவிலுக்கு போன இடத்தில் இதெல்லாம் தேவையா என்று திட்ட ஆரம்பிக்கிறார்.

உடனே கோமதி இதெல்லாம் சமாளிக்கும் விதமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாண்டியன் கொஞ்சம் கூட சாந்தமாகாத நிலையில் கதிர் எதிர்த்து பேச ஆரம்பிக்கிறார். ஆனால் கதிர் பேச ஆரம்பித்து விட்டால் பிரச்சினை பெருசாகிவிடும் என்ற காரணத்தினால் கோமதி, மீனாவை கோர்த்துவிட்டார். உடனே மீனாவும் எல்லா விஷயத்திலும் முந்திரி கொட்ட மாதிரி முந்துவது போல் இந்த விஷயத்திலும் பாண்டியனை சமாளித்து விடுகிறார்.

உடனே ராஜி, பாண்டியன் காலில் விழுந்து மன்னிப்பு கேட் நிலையில் பாண்டியனும் சமரசம் ஆகி விடுகிறார். அடுத்ததாக எல்லோரும் அரசி கல்யாண வேலையை பார்க்கலாம் என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இந்த சூழ்நிலையில் மீனாவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக சக்திவேல் சூழ்ச்சி பண்ண ஆரம்பித்துவிட்டார்.