கல்யாணத்துக்கு பின் சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா.. வாயை மூடிக் கொண்டு கொடுத்த பதிலடி

Priyanka: பிரபலம் என்றாலே அவர்களை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் வருவது வழக்கம்தான். அந்த வகையில் விஜய் டிவியில் தூணாக இருக்கும் தொகுப்பாளினி பிரியங்கா மீதும் தொடர்ந்து வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது. சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற நிகழ்ச்சியில் மூலம் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அந்த வகையில் இவர் எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் அந்த நிகழ்ச்சி ஹிட் ஆகிவிடும். அப்படிப்பட்ட பிரியங்கா தொகுப்பாளனியாக மட்டும் இல்லாமல் பிக் பாஸ் சீசன் 5வது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 100 நாட்கள் வீட்டிற்குள் இருந்து ரன்னராக வெற்றி பெற்றார். அடுத்ததாக குக் வித் கோமாளி சீசன் ஐந்தாவது நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் மணிமேகலையுடன் ஏற்பட்ட பஞ்சாயத்தினால் மணிமேகலை விஜய் டிவி விட்டு விலகும்படி நிலைமை ஆகிவிட்டது. இருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பிரியங்கா விஜய் டிவியில் வலம் வந்தார். அப்படிப்பட்டவரின் இரண்டாவது திருமணம் பேசும் பொருளாக அமைந்தது.

priyanka (1)
priyanka (1)

அதாவது 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன்பின் ஏற்பட்ட மனக்கசப்பினால் 2022 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று தனியாக இருந்தார்.

ஆனால் திடீரென்று கடந்த மாதம் ஏப்ரல் 16ஆம் தேதி அவசர அவசரமாக டிஜே வசி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் திடீர் திருமணமாக இருந்ததால் சில வதந்தியில் சிக்கிக் கொண்டார்.

அதாவது திடீர் திருமணம் ஆனதற்கு முக்கிய காரணம் பிரியங்கா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி விட்டதாகவும் அதனால் தான் அவசர அவசரமாக கல்யாணத்தை பண்ணியதாகவும் வதந்திகள் வந்தது. ஆனால் இதற்கெல்லாம் பதில் கொடுக்கும் விதமாக தற்போது பிரியங்கா அணிந்திருந்த ஒரு டீசர்ட் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதாவது அதில் போட்டிருப்பது உங்க வாயு உங்க உருட்டு என்று போட்டு பிரியங்கா அவருடைய வாயை மூடிக்கொண்டு சிரித்தபடி புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படத்தின் மூலம் பிரியங்கா மீது ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது.