எரிகிற நெருப்பில் குளிர் காயும் ரோகிணி.. சுருதியை சமாதானப்படுத்தும் விஜயா, வெளியேறும் முத்து மீனா
Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஸ்ருதியின் அம்மாவும், ரோகினியும் நடக்கப்படும் பங்க்ஷனில் எதையாவது சதி வேலை பார்த்து முத்துவை சிக்க வைக்க வைக்கும் என்று பல வழிகளில் முயற்சி செய்தார்கள். ஆனால் எதற்குமே அசரத முத்து, அப்பாவின் பேச்சுக்கும் மீனாவின் பாசத்துக்கும் கட்டுப்பட்டு அமைதியாகவே இருந்தார். இதற்கு இடையில் ரோகிணி அப்பா இந்த ஃபங்ஷனுக்கு வரவில்லை என்று விஜயா மொத்த கோபத்தையும் காட்டி ரோகிணியை சீண்டிப் பார்க்கிறார். இதெல்லாம் ரோகினிக்கு தேவைதான் என்று சந்தோஷப்படும் நேரத்தில் முத்துவுக்கு வேறொரு விதத்தில் பிரச்சனை வந்து விடுகிறது. அதாவது ஸ்ருதியின் அப்பா, மீனா மீது திருட்டுப் பழியை போட்டு விடுகிறார். இதை பார்த்து விஜயாவும் எதுவும் சொல்லாமல் வாய மூடிட்டு இருக்கிறார். இதனால் மீனாவுக்கு என்னவென்று சொல்ல முடியாமல் முத்துவிடம் அழுதுகிட்டே ஓடி வந்து விட்டார். மீனா அழுகையைப் பார்த்ததும் அண்ணாமலை மற்றும் முத்துவும் என்ன ஆச்சு என்று கேட்கிறார்கள். மீனா சொல்வதற்கு முன் சுருதி அப்பா அனைவரது முன்னாடியும் நகையே திருடின திருடி என்று மீனா மீது பழி சுமத்தி விட்டார்.
