சந்தியா ராகம் சீரியலில் புவனேஸ்வரி விரித்த வலையில் சிக்கிய சீனு.. மாஸ் காட்டப் போகும் தனம்

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், புவனேஸ்வரி பொருத்தவரை ரகுராம் குடும்பத்தில் இருப்பவர்களை பிரித்து ரகுராம் யாருமில்லாமல் தனியாக நிற்கவைக்க வேண்டும் என்பதுதான் ஆசை. அதை நிறைவேற்றும் விதமாகத்தான் பல சூழ்ச்சிகளை செய்து வருகிறார். ஆனால் புவனேஸ்வரி என்ன சூழ்ச்சி போட்டாலும் அதையெல்லாம் முறியடிக்கும் விதமாக மாயா, ரகுராம் குடும்பத்திற்கு காவல் தெய்வமாக நின்று காத்து வருகிறார்.

ஆனால் தற்போது இதையெல்லாம் தாண்டி சீனு மூலம் புவனேஸ்வரி புதுசாக ஒரு பிளானை போட்டு விட்டார். அந்த வகையில் சீனுக்கு பணம் தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொண்ட புவனேஸ்வரி, சுரிட்டி கையெழுத்து போட்டால் பணம் கிடைக்கும் என்று ஒரு நபர் மூலம் சீனுவிடம் சொல்ல வைக்கிறார். சீனுவும் அதை நம்பி அம்மாவையும் சித்தப்பாவையும் கூட்டிட்டு வருகிறார்.

வந்ததும் அந்த நபரிடம் சீனு, பத்மா மற்றும் சிவராமன் கையெழுத்து போட்டு விடுகிறார்கள். இந்த கையெழுத்தால் எல்லாம் தலைகீழ மாறப்போகிறது என்று புவனேஸ்வரி சந்தோஷப்பட்டு கொண்டார். அதன்படி ஊர் பஞ்சாயத்தை கூட்டி அவர்கள் கையெழுத்து போட்டதை காட்டி இனி ரகுராம் தங்கிருக்கும் வீடு எங்களுக்கு சொந்தமானது என்று கேட்கிறார்.

அதன்படி ரகுரமும் என் குடும்பத்தில் இருப்பவர்கள் போட்ட கையெழுத்தை நான் மதிக்கிறேன். அதனால் நாங்கள் அந்த வீட்டை காலி பண்ணி விடுகிறோம் என்று சொல்லிவிடுகிறார். உடனே புவனேஸ்வரி, மாயாவிடம் நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த விஷயம் இப்பொழுது நடக்கப் போகிறது. குடும்பம், வீடு இல்லாமல் ரகுராம் நடுத்தெருவில் நிற்கப் போகிறான் என்று சவால் விடுகிறார்.

ஆனால் மாயா இருக்கும் வரை ரகுராம் குடும்பத்தில் எந்தவித பிரச்சினையும் வராது. அந்த வகையில் ரகுராம், தத்தெடுத்ததாக மாயாவும் கையெழுத்து போட வேண்டும், ரகுராமின் சொந்த பிள்ளையாக இருக்கும் தனமும் கையெழுத்து போட வேண்டும். இதனால் இவர்களுடைய கையெழுத்து இல்லாமல் அந்த பத்திரம் செல்லுபடி ஆகாது என்பதற்கு அடிப்படையில் அந்த வீடு மறுபடியும் ரகுராமுக்கே வந்து சேரும். வழக்கம்போல் புவனேஸ்வரி தோற்று போய் நிற்கப் போகிறார்.