சன் டிவி சீரியலுக்கு எதிராக தூக்கிய போர் கொடி.. 4 வருஷமாக அரைச்ச மாவை அரைக்கும் சீரியல்

Sun Tv Serial: சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்று மக்களிடம் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறது. ஆனாலும் எல்லா சீரியல்களும் மக்களை கவர்ந்து விடுவதில்லை. ஆனால் எந்த சீரியல்கள் மக்கள் விரும்பி பார்ப்பார்களோ, அந்த சீரியல்தான் சாய்காலம் நேரத்தில் ப்ரைம் டைமிங்கில் ஒளிபரப்பு செய்து வருவார்கள்.

ஆனால் இப்பொழுது ஒரு சீரியல் ப்ரைம் டைமங்கில் ஒளிபரப்பு செய்து வந்தாலும் அந்த சீரியல் சுத்த வேஸ்ட் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் அந்த சீரியலை வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு போர் கொடியை தூக்கி வருகிறார்கள்.

ஆரம்பத்தில் என்னமோ அந்த சீரியல் மக்களை கவர்ந்தது உண்மைதான். ஆனால் போகப் போக கதை எதுவும் இல்லாமல் அரைச்ச மாவை அரைத்துக் கொண்டு பார்ப்பவர்களை எரிச்சல் படுத்தும் விதமாக நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் இந்த ஒரு சீரியலை தான் மக்கள் அதிக அளவில் வெறுக்கிறார்கள் என்று அவர்கள் போடும் கமெண்ட்ஸ் மூலமே நன்றாக தெரிகிறது. அப்படிப்பட்ட சீரியல் எதுவென்றால் கயல். கிட்டத்தட்ட நான்கு வருடமாக ஓடிக் கொண்டு வருகிறது.

ஆனால் புதுசாக கதை இல்லாமல் பிரச்சனை மட்டுமே காட்டிக்கொண்டு சிக்கித் தவிக்கிறது. இதற்கு பேசாமல் இந்த சீரியலை முடித்துவிட்டு பராசக்தி சீரியலை கொண்டு வரலாம். ஆனால் இவ்வளவு விமர்சனங்களை பார்த்த பிறகும் சேனல் தரப்பில் இருந்து இந்த சீரியலுக்கு முழுவிழா பண்ணாமல் ஏன் தொடர்ந்து ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

மேலும் புதுசாக நான்கு சீரியல்கள் வரிசையில் இருப்பதால் கூடிய சீக்கிரத்தில் கயல் சீரியலை முடித்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.