காலில் விழுந்து கெஞ்சியும், கணவரை ஏற்றுக் கொள்ள மறுக்கும் நடிகை.. இயக்குனருடன் நடக்கப் போகும் 2வது திருமணம்

Gossip: சினிமா நடிகைகள் எல்லாம் இப்போது கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்வதை ட்ரெண்டாக்கி விட்டனர். அதிலும் சீரியல்களில் குடும்ப குத்து விளக்காகவே நடித்து ரசிகர்களை கவர்ந்த பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னுடன் இணைந்து நடித்த நடிகரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் நட்சத்திர தம்பதிகளாக ஜொலிப்பார்கள் என நினைத்துக் கொண்டிருக்கையில், திடீரென்று கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். ஆனால் நடிகையை சமாதானப்படுத்தி அவரோடு மறுபடியும் வாழ அந்த நடிகர் எவ்வளவோ முயற்சிக்கிறார்.

ஒரு கட்டத்தில் காலில் விழுந்து கூட கெஞ்சி பார்க்கிறார். அப்படியும் அந்த நடிகை, ‘தூக்கிப்போட்டது தூக்கிப் போட்டதுதான்’ என்று அவருடன் சேர்ந்து வாழ மறுக்கிறார். அது மட்டுமல்ல அந்த நடிகை கொஞ்சம் கூட நடிகருடன் சேர்ந்து வாழும் எண்ணமே இல்லாமல் இருக்கிறார்.

Also Read: குழந்தையை வைத்து செட்டில்மெண்ட் வாங்கும் நடிகை.. விழி பிதுங்கி நிற்கும் தொழிலதிபர்

இயக்குனருடன் நடக்கப் போகும் 2வது திருமணம்

அந்த சீரியல் நடிகை இப்போது இரண்டாவது திருமணத்திற்கும் தயாராகி விட்டார். பிரபல கன்னட திரைப்பட இயக்குனர் ஒருவருடன் நடிகைக்கு விரைவில் திருமணம் நடக்கப்போகிறது. நடிகை நடித்துள்ள கன்னட திரைப்படம் ஒன்றும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

பாவம் அந்த நடிகர் தான் நடிகையை மறக்க முடியாமல் சோகத்தில் தாடி உடன் சுற்றுகிறார். நடிகையோ அந்த பிரபல இயக்குனரை கையில் வைத்துக்கொண்டு அடுத்தடுத்த தொடர்ந்து படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வர பெரிய பிளான் போட்டிருக்கிறார்.

Also Read: பெரும்புள்ளியை வளைத்து போட்டு பண மழையில் நனைந்த நடிகை.. ஆடம்பர வாழ்க்கைக்கு விரித்த வலை

Next Story

- Advertisement -