நடிகைக்கு நேர்ந்த கொடூரம்.. குடிபோதையில் நடந்த பயங்கரம்

Gossip: நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாகும் படி இப்போது பல சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சினிமாவில் அட்ஜஸ்மென்ட் என்பது கட்டாயமாக இருந்திருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாகும்படி பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லி வருகிறார்கள்.

அவ்வாறு ஒரு நடிகை படத்தில் நடித்து விட்டு அங்கேயே தங்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதை அறிந்து கொண்ட சில நபர்கள் நன்றாக குடித்துவிட்டு குடிபோதையில் நடிகை தங்கியிருந்த இடத்திற்கு சென்று கதவை தட்டி இருக்கிறார்கள்.

இதனால் பயந்து போன நடிகை என்ன செய்வது என்று தெரியாமல் நடுங்கி இருக்கிறார். அப்போது அதே படத்தில் கவர்ச்சி நடிகை ஒருவர் நடித்து வந்த நிலையில் நடிகையுடன் தான் தங்கி இருந்தார். அவர் தான் துணிச்சலாக குடிபோதையில் இருந்த ஆட்களை விரட்டி அடித்திருக்கிறார்.

நடிகைக்கு நேர்ந்த கொடூரம்

அன்று கவர்ச்சி நடிகை மட்டும் அந்த இடத்தில் இல்லை என்றால் கதாநாயகியின் நிலைமை வேறு மாதிரி ஆகி இருக்கும். நடிகைகள் என்றாலே சினிமாவிலும் சரி, வெளியிலும் சரி எல்லாத்துக்கும் சம்மதித்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

சினிமா என்பது மற்ற தொழில் மாதிரி அதுவும் ஒரு வேலை என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள். நடிகைகளுக்கு தொடர்ந்து இதுபோன்ற சங்கடங்கள் வரும் நிலையில் இப்போது கமிட்டி அமைத்து அவர்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை வெட்ட வெளிச்சமாக்கி வருகிறார்கள்.

நடிகைக்கு நடந்த பயங்கரம்

Trending Cinema News

- Advertisement -