2 மனைவிகள் கட்டியும் அடங்காத ஆசை.. கவர்ச்சி நடிகை உடன் உல்லாசமாக இருக்கும் இயக்குனர்

இயக்குனர் ஒருவர் ஆரம்பத்தில் மிகவும் துணிச்சல் வாய்ந்த கதைகளை படமாக எடுத்த வெற்றி கண்டு வந்தார். ஆனால் சமீப காலமாக அவர் எடுக்கும் படங்கள் எல்லாம் காதல் படமாக தான் இருக்கிறது. இதற்குக் காரணம் நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய தான் இப்படி செய்கிறாராம்.

கல்லுக்கு புடவை கட்டினால் கூட அந்த இயக்குனர் விடமாட்டாராம். அந்தளவுக்கு மோசமான அவர் முதலில் தன் படத்தில் நடித்த நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வேறு ஒரு பெண்ணையும் இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். ஆனாலும் இப்போது அவர் செய்திருக்கும் சேட்டை அம்பலமாகி இருக்கிறது.

Also Read : ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.. மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் போடும் கும்மாளம்

அதாவது கவர்ச்சி நடிகை ஒருவருடன் இயக்குனர் பழகி வருகிறாராம். அந்த நடிகையும் ஆரம்பத்தில் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் இப்போது பட வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சிக்கு தாவி விட்டார். அதுவும் படங்களில் ஓவர் கிளாமர் காட்டி வருகிறார்.

இந்நிலையில் இந்த சில்மிஷமான இயக்குனர் படத்தில் நடித்து வரும் கவர்ச்சி நடிகை பிரபல ஹோட்டல் ஒன்றில் ரூம் போட்டு தங்கி இருக்கிறாராம். இவரின் ரூமுக்கு அருகில் தான் இயக்குனரும் ஒரு ரூம் போட்டு இருக்கிறார். ஆனால் எந்நேரமும் நடிகையின் ரூமில் தான் இயக்குனர் இருக்கிறாராம்.

இந்த நடிகை மட்டுமின்றி படத்திற்கு ஆடிசனுக்கு வரும் நடிகைகளை கூட இயக்குனர் விட்டு வைப்பதில்லையாம். மேலும் நாளுக்கு நாள் இவருடைய நடவடிக்கை மோசமாக இருப்பதாக படக்குழு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுகிறது. ஆனால் எதைப் பற்றியும் இயக்குனர் கண்டு கொள்வதில்லையாம்.

Also Read : நடிகையை பந்தாடிய 20 நடிகர்கள்.. காற்றில் பறந்த மானம், விஷாலை சுற்றி அடிக்கும் கர்மா

Next Story

- Advertisement -