ஸ்டெராய்டு, மனஅழுத்தம் , ரூமில் 360 கேமரா.. மனைவி ஆர்த்தியை பிரிவதற்கு முன்னான ஜெயம் ரவியின் வலி மிகுந்த தருணங்கள்

Jayam Ravi: நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து சர்ச்சை கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவை உலுக்கி இருக்கிறது. ஆர்த்தி பிரியப் போகிறேன் என்ற ஜெயம் ரவியின் பதிவு, இது என்னுடைய சம்மதம் இல்லாமல் வெளியிடப்பட்ட அறிக்கை என ஆர்த்தி பதிவிட்டது என அடுத்தடுத்து இவர்களுடைய பிரச்சனை வெட்ட வெளிச்சம் ஆகிக்கொண்டிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் ஜெயம் ரவி தன்னுடைய பிறந்தநாள் செப்டம்பர் 10ஆம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்குமாறு மனு அளித்திருக்கிறார். ஜெயம் ரவியின் விவாகரத்து இவ்வளவு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்த காரணம் அவர் இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்கியது இல்லை என்பதால் தான்.

அது மட்டும் இல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் கூட ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் தங்களுடைய பரஸ்பர காதலை அவ்வளவு அழகாக வெளிப்படுத்தினார்கள். கடந்த மாதம் ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜெயம் ரவி உடன் எடுத்த புகைப்படங்களை எல்லாம் நீக்கிய போது இந்த விவாகரத்து சர்ச்சை தொடங்கியது.

எப்படியும் பிரச்சனை ஆர்த்தி பக்கம் தான் என கண்மூடித்தனமாக பலரும் பேசினர். ஆனால் இந்த விவாகரத்தை முன் கொண்டு வந்தது ஜெயம் ரவி தரப்பு தான் என தற்போது தெரிய வருகிறது.இந்த விவாகரத்து குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கும் அந்தணன் பல திடுக்கிடும் தகவல்களை சொல்லி இருக்கிறார்.

ஜெயம் ரவியின் வலி மிகுந்த தருணங்கள்

ஜெயம் ரவி தான் காதலித்த பெண்ணே கரம் பிடித்து சந்தோஷமாக வாழ்கிறார் என அவருடைய குடும்பத்தினர் நினைத்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் ஜெயம் ரவியை ஒரு வெற்றே ஹீரோவாக மாற்ற அவருடைய அப்பாவும் அண்ணனும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

ஆனால் ஜெயம் ரவியின் சமீப கால தொடர் தோல்விகள் அவருடைய குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. அப்படி ஒரு தருணத்தில் ஜெயம் ரவிக்கு வந்த வாய்ப்பு தான் பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக நடித்தது. இந்த படத்திற்கு முன்பு ஜெயம் ரவி கொஞ்சம் அதிக உடல் எடையுடன் இருந்திருக்கிறார்.

ராஜராஜ சோழனாக நடிப்பதற்கு ஏற்றவாறு உன்னுடைய உடம்பை மாற்றி சீக்கிரம் வா என மணிரத்தினம் சொல்லி இருக்கிறார். தனக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டுவிடக் கூடாது என ஜெயம் ரவி அவசர அவசரமாக உடல் எடையை குறைத்து இருக்கிறார்.

இதற்காக அவர் ஸ்டெராய்டுகளை பயன்படுத்தியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் ஜெயம் ரவியின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள். மருத்துவர்கள் ஸ்டெராய்டு பயன்படுத்தியது அவர் உடலுக்கு ஒவ்வாமல் போனது மட்டுமில்லாமல் ஜெயம் ரவி நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தது தான் இதற்கு காரணம் என சொல்லி இருக்கிறார்கள்.

இது ஜெயம் ரவியின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. ஜெயம் ரவியின் கால்ஷீட் மற்றும் படங்களுக்கு கதை கேட்பது போன்ற வேலையே ஆர்த்தியின் அம்மா சுஜாதா கவனித்து வந்திருக்கிறார். அவர் தொடர்ந்து கதை கேட்டு செலக்ட் பண்ணிய படங்கள் எல்லாமே அவருக்கு தோல்வியாக அமைந்திருக்கிறது.

ஜெயம் ரவியை மீண்டும் பெற்று ஹீரோவாக மாற்ற அவருடைய அண்ணன் தனி ஒருவன் 2 படத்தை எடுப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு கூட கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு எல்லா தேதிகளையும் புக் பண்ணி வைத்திருந்திருக்கிறார் அவருடைய மாமியார்.

தன்னுடைய சொந்த அண்ணனுக்கு தேதி கொடுக்காமல் அலைய விடுவதை நினைத்து ஜெயம் ரவி ரொம்பவே நெருக்கடியில் இருந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவருடைய மனைவி ஆர்த்திக்கு அவர் மீது அதீத காதல் இருந்திருக்கிறது. இந்த அதீத காதல் எங்கே ஜெயம் ரவி தன்னை விட்டு விட்டு போய்விடுவாரோ என்ற பயத்தை அவருக்கு கொடுத்திருக்கிறது.

இதனால் ஜெயம் ரவியை உளவாளி வைத்து செக் பண்ணும் அளவுக்கு ஆர்த்தி சென்று இருக்கிறார். ஒருமுறை ஜெயம் ரவி ஊட்டியில் படப்பிடிப்பில் இருக்கும் பொழுது நடுராத்திரி ஆர்த்தி அவருக்கு போன் செய்திருக்கிறார். மேலும் வீடியோ காலில் வந்து 360 டிகிரியில் ரூமை தனக்கு காட்டும் படியும் சொல்லி இருக்கிறார்.

இப்படி நினைத்ததை செய்ய முடியாமல், சுதந்திரம் இல்லாமல் இருந்ததுதான் ஜெயம் ரவியின் மன அழுத்தத்திற்கு காரணம் என வலைப்பேச்சு அந்தணன் சொல்லி இருக்கிறார். கிட்டத்தட்ட ஜெயம் ரவி விவாகரத்து வாங்குவது என்பது ஒரு கிளி கூண்டை விட்டு பறப்பதற்கு சமம் எனவும், இந்த விவாகரத்தை முன்னெடுத்து நடத்துவது அவருடைய அண்ணன் மோகன் ராஜா என்றும் சொல்லி இருக்கிறார்.

கிட்டத்தட்ட ஜெயம் ரவியின் இந்த திருமண வாழ்க்கை ரகுமான் மற்றும் சித்தா ரா நடித்த புதுப்புது அர்த்தங்கள் படத்தின் கதைதான். அதில் பெரிய பாடகராக இருக்கும் ரகுமான் மீது சந்தேகப்பட்டு கீதா அவரை ரொம்பவே டார்ச்சர் செய்வார். அப்படி ஒரு கதை தான் ஜெயம் ரவியின் வாழ்க்கையில் நடந்ததாகவும், தன்னால் அழுத்தம் தாங்க முடியாமல் தான் அவர் பிரிவை தேர்ந்தெடுத்து இருக்கிறார் எனவும் சொல்லி இருக்கிறார்.

ஜெயம் ரவியை பழிவாங்கத் துடிக்கிறாரா ஆர்த்தி.?

Trending News

- Advertisement -spot_img