வியாழக்கிழமை, அக்டோபர் 24, 2024

கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கை மாட்டிவிட ரூபா செய்த காரியம்.. ஆசிரமத்திலிருந்து கிளம்பிய தீபாவுக்கு வரும் ஆபத்து

Karthigai Deepam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபா எங்கே இருக்கிறார் என்கிற விஷயம் தெரியாமல் கார்த்திக் நாலா பக்கமும் தேடிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் கீதாவுடன் சேர்ந்து கார்த்திக் போய்க் கொண்டிருக்கும் பொழுது நடுவில் முருகன் என்ற சிறுவனை பார்க்கிறார். அப்பொழுது கார்த்திக் அந்த சிறுவனை பார்த்து பேசும் பொழுது கீதாவை பார்த்து தீபா என்று நினைத்து பேசினார்.

அதன்பிறகு கார்த்திக் நீ இவங்களை இதற்கு முன்னதாக பார்த்தியா என்று கேட்டார். அதற்கு அந்த முருகன் ஆமாம் ஒருமுறை அவங்களுக்கு உடம்பு சரியில்லாமல் தலையில் கட்டு போட்டு இருந்து கார்த்திக் என புலம்பிக்கொண்டே நடுரோட்டில் நடந்து வந்தார். அப்பொழுது எதிர்க்கே வந்த கார் அவங்க மீது மோத பாத்தது. உடனே நான் தான் அவங்களை காப்பாற்றினேன்.

உடனே பக்கத்தில் இருக்கும் ஆசிரமத்தில் இருந்து வந்தவர்கள் இவங்களுக்கு உடம்பு சரியில்லை. எங்க ஆசிரமத்தில் தான் இருக்கிறாங்க என்று சொல்லி அவங்களை கூட்டிட்டு போய்விட்டார்கள் என்று சொல்கிறார். இதை கேட்டதும் கார்த்திக் அந்த ஆசிரமம் உனக்கு தெரியுமா என்று கேட்டு முருகனை அந்த ஆசிரமத்திற்கு அழைத்துப் போகிறார். ஆனால் அதற்குள் அந்த ஆசிரமத்தில் இருந்து தீபாவை கச்சேரியில் பாடுவதற்கு கூட்டிட்டு போய் விட்டார்கள்.

இது தெரியாமல் ஆசிரமத்திற்கு கார்த்திக் சென்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ஜெயிலில் இருக்கும் ஐஸ்வர்யாவை பார்க்க போன ரூபா, எப்படியாவது தீபாவை கார்த்திக் சந்தித்து விடக்கூடாது என்று சொல்கிறார். உடனே ஐஸ்வர்யா அங்க வைத்து வேற ஒரு பிளானை போட்டு ரூபாவை செய்ய சொல்கிறார்.

அதாவது போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் தடை செய்யப்பட்ட பொருளை ரூபஸ்ரீ எடுத்துட்டு போயி கார்த்திக் காரில் போட்டு விட்டால் தீபாவை காப்பாற்றுவதற்கு கார்த்திக்கால் போக முடியாது. அத்துடன் போலீசில் மாட்டிக்கொண்டு அங்கிருந்து போவதற்கு நேரம் ஆகிவிடும். அதற்குள் என்னுடைய ஆளு துர்கா தீபாவின் கதையை முடித்துவிடுவார் என்று ரூபஸ்ரிடம் ஐஸ்வர்யா சொல்கிறார்.

அதன்படி ரூபஸ்ரீ ஆஸ்ரமத்தில் நிற்கும் கார்த்திக்கின் காரை பார்த்து அதில் தடை செய்யப்பட்ட பொருளை போட்டுவிட்டு போலீஸ்க்கும் தகவலை கொடுத்து விடுகிறார். இதனால் ஆசிரமத்தில் இருந்து கிளம்பி போன காரை பாலோ பண்ண போகும் கார்த்திக் நடுவில் போலீஸ் இடம் மாட்ட வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் கடைசி நிமிடத்தில் கூட தீபாவுக்கு எந்த பிரச்சனையும் வராமல் கார்த்திக் காப்பாற்றி விடுவார்.

- Advertisement -spot_img

Trending News