திரையுலகம் எந்த அளவுக்கு ஒருவருக்கு புகழை கொடுக்குறதோ, அதே அளவுக்கு பிரச்சினையையும் கொடுக்கக்கூடியது. இதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் மீடியாக்களின் வதந்தியை சமாளிக்க முடியாமல் இளம் வயதிலேயே ஒரு நடிகை தன் உயிரைப் போக்கிக் கொண்டது தான் பரிதாபம்.
சிறு வயதிலேயே சினிமாவுக்குள் நுழைந்து பிரபலமானவர்தான் அந்த நடிகை. துரு துரு பேச்சும், பப்ளி முகமும் அவரை விரைவிலேயே அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு சென்றது. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு சில திரைப்படங்களில் முக்கிய கேரக்டரும் கொடுக்கப்பட்டது.
அதன் மூலம் தன்னை நிரூபித்த அந்த நடிகை சின்னத்திரையிலும் சீரியல்களில் நடித்து பிரபலமானார். இப்படி பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் சக நடிகர் ஒருவருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது. மிகவும் எதார்த்தமாக பழகி வந்த இந்த நடிகையை அந்த நடிகர் பல வழிகளில் லவ் டார்ச்சர் செய்திருக்கிறார்.
இத்தனைக்கும் அந்த நடிகருக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் இருந்தார்கள். ஆனாலும் இந்த நடிகையை அவர் விடாமல் துரத்தி இருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நடிகை திருமணமானவரை காதலிக்கிறார் என்பது போன்ற வதந்திகளும் பரவ ஆரம்பித்தது.
இதனால் மனமுடைந்து போன அந்த நடிகை தனக்கு நெருக்கமானவர்களிடம் இதை சொல்லி புலம்பி இருக்கிறார். ஆனாலும் அந்த சிறு வயதில் அவருக்கு இதை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற முதிர்ச்சி இல்லை. அதனாலேயே அவர் விபரீதமான முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
அதாவது அந்த நடிகை தன்னுடைய 20 வயதிலேயே இந்த டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் போலீஸ் கேஸ் வரை சென்றது. ஆனாலும் சம்பந்தப்பட்டவருக்கு உரிய தண்டனை கிடைக்கவில்லை. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே நடிகை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டார் என்பது தெரியும். இருப்பினும் நடிகையின் மரணம் வெளியுலகுக்கு தெரியாமலேயே மூடப்பட்டு விட்டது.