சமீபகாலமாக சின்னத்திரை நடிகைகளுக்கு வெள்ளித்திரைகள் வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஆனால் ஒரு ஹீரோயினாக அங்கீகாரம் கொடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு பட வாய்ப்பு இல்லை. பெரும்பாலும் செகண்ட் ஹீரோயின் வாய்ப்புதான் அவர்களை நாடி வருகிறது.
சில சமயங்களில் முதல் படத்தில் வாய்ப்பு கிடைத்தாலும் அடுத்த அடுத்த படங்களில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் கவர்ச்சியான புகைப்படத்தை எடுத்து தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இதைப் பார்த்த தயாரிப்பாளர்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்ற யோசனையில் இவ்வாறு செய்து வருகிறார்கள்.
ரம்யா பாண்டியன் : ஒரே ஒரு போட்டோசூட் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். மேலும் இதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் சில படங்களை நடித்த ரம்யா பாண்டியன் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். இதனால் கிளாமரான போட்டோசூட் நடத்தி வருகிறார்.
ஷிவானி : விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடரில் கதாநாயகியாக நடித்தவர் ஷிவானி. இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். மேலும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக ஷிவானி நடித்திருந்தார். இப்போது பம்பர் என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவரும் சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
தர்ஷா குப்தா : சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தர்ஷா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இதைத்தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த தர்ஷா தற்போது படு கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இதனால் ஏகப்பட்ட ரசிகர்கள் இவரது சமூக வலைத்தளத்தில் குவிந்து கிடக்கின்றனர்.
யாஷிகா ஆனந்த் : விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமானவர் யாஷிகா ஆனந்த். இவர் அப்போதே பல சர்ச்சைகளில் சிக்கி இருந்த நிலையில் சில படங்களில் நடித்திருந்தார். இப்போது கைவசம் ஒரு சில படங்கள் வைத்திருக்கும் நிலையில் படு மோசமான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.