எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றிய தில் ராஜ்.. விஜய் கூட கட்டுப்படுத்தாத பரிதாபம்

தெலுங்கில் பிரபல இயக்குனரான தில் ராஜு அங்கு பல முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரித்துள்ளார். இப்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

அதாவது சமீபத்தில் தில் ராஜுவின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது எனக்கு மட்டும் ஏன் இப்படி பிரச்சினை வருகிறது என தில் ராஜு மிக வருத்தத்துடன் பேசி இருந்தார். வாரிசு படத்தை பண்டிகை நாட்கள் தெலுங்கில் வெளியிடாத சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் ஒருவழியாக பொங்கலுக்கு வாரிசு படம் வெளியாவது உறுதியாகியுள்ளது.

மேலும் அஜித்தை விட விஜய் தான் மாஸ் ஹீரோ அதனால் தமிழ்நாட்டில் வாரிசு படத்துக்கு தான் அதிக திரையரங்குகள் கொடுக்க வேண்டும் என உதயநிதி இடம் பேச உள்ளதாக தில் ராஜு அந்த பேட்டியில் கூறியிருந்தார். இவ்வாறு தேவை இல்லாத விஷயத்தை பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

அதாவது ஏற்கனவே இந்த சர்ச்சை நீண்ட நாட்கள் ஆக இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இவர்களில் யார் நம்பர் ஒன் நடிகர் என்ற போட்டி இருக்கிறது. இப்போது போய் இவர் இப்படி பேசி உள்ளது எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் பத்தி எரிகிறது.

ஆனால் தற்போது வரை விஜய் இதைப்பற்றி எந்த ஒரு விஷயமும் சொல்லாமல் உள்ளார். இந்த விஷயம் இவ்ளோ பெரிய பூதாகரமாக வெடித்த பின்பும் விஜய் மௌனம் காத்து வருவது ஏன் என்று பலரும் கேட்டு வருகிறார்கள். ஆனால் வாரிசு படம் முடிந்தவுடன் அந்த படக்குழுவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் தான் விஜய் நடந்து கொள்கிறார்.

அதனால் தான் தில் ராஜு பேச்சுக்கு எதிராகவும் அவரால் எதுவும் சொல்ல முடியாமல் உள்ளார். மேலும் வாரிசு படம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் விஜய் வாரிசுப் படத்துக்கு ஒரு முழுக்கு போட்டுவிட்டு தளபதி 67 படத்தை தான் தற்போது நம்பி உள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →