கர்ப்பமான பின் கல்யாணம் செய்துகொள்வது புது ட்ரெண்ட்.. நட்சத்திர தம்பதியர்களின் திடீர் திருமணம்

பல வருடங்களாக காதலித்த காதல் ஜோடி சமீபத்தில் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இவர்களது திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே நட்சத்திர தம்பதியர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் இந்த அவசர திருமணத்திற்கு என்ன காரணம் என்பது வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

அதாவது அந்த பாலிவுட் நடிகை கூட நடித்த பாலிவுட் நடிகரால் கர்ப்பமான பின்னர் தான் திடீரென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீப காலமாகவே கர்ப்பமான பின்னர் திருமணம் செய்து கொள்வது பாலிவுட்டில் புது ட்ரெண்டாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகருக்கும் பாலிவுட் நடிகைகள் அவசர அவசரமாக திருமணம் நடந்தது.

அதற்கும் இதுதான் காரணம். அந்த நடிகை கர்ப்பமானதால்தான் உடனே திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். மேலும் 35 வயதை கடந்தால் தான் பாலிவுட் நடிகைகள் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் இவர் கொஞ்சம் சீக்கிரம் திருமணம் செய்து கொண்டதன் காரணம் என்ன என்பது தெரிந்து விட்டது.

மேலும் இந்த நட்சத்திர தம்பதியர் திருமணம் முடிந்த கையோடு டெல்லிக்கு சென்றனர். பின்பு காதல் மனைவிக்காக அந்த பாலிவுட் நடிகர் மும்பையில் ரூபாய் 70 கோடி மதிப்பில் பிரம்மாண்ட பங்களா ஒன்றை கட்டி வைத்ததால் அங்கு அவர்கள் இருவரும் குடியேறி உள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →