எம்ஜிஆர், விஜயகாந்த் போல வர முடியாத ரஜினி.. வேற வழியில்லாமல் கையில் எடுத்த ஆயுதம்

72 வயதிலும் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், என்னதான் சினிமாவில் எட்டு முடியாத உயரத்திற்கு சென்றாலும் அவரால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் கேப்டன் விஜயகாந்த் போல வர முடியவில்லை என்ற கருத்து ரசிகர்களின் மனதில் உள்ளது.

ஏனென்றால் ரஜினிக்கும் நிறைய உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அவர் மட்டும் முடிவு எடுக்க முடியாது மனைவி சொல்லே மந்திரம். யாருக்குமே உதவி கூட செய்ய கூடாது. ஆனால் அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படும் நபராக அவருடைய குடும்பம் ரஜினியை மாற்றி உள்ளது.

ரஜினி நடத்திய பள்ளிக்கூடத்திற்கு சம்பளம் தராமல் போனது, ஹோட்டலை நடத்தி அதற்கு வரி கட்ட முடியாது என கொரோனாவை காரணம் சொன்னது, பிறகு அவருடைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் படம் நஷ்டமடைந்ததால் பினான்சியரை ஏமாற்ற முயற்சி செய்தது, ரசிகர்களை இன்று வரை முட்டாளாக பயன்படுத்துவது, இப்படி ரஜினி பெயரை கெடுக்கும் விதமாக, எல்லாம் அவருடைய குடும்பத்தின் சார்பாகவே நடந்துள்ளது.

அதனால்தான் அரசியலுக்கு வராமல் ஆன்மீகம் போதும். இருக்கும் வரை இப்படியே இருக்கலாம் என்று ரஜினி சென்று விட்டார். ரஜினிக்கு நிறைய கெட்ட பழக்கங்கள் இருந்து இன்று நல்லபடியாக இருப்பதும் அவரது மனைவி தான் காரணம், மனைவியை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டான். அதே சமயத்தில் ஒரு எம்ஜிஆரை போல வர வேண்டிய ரஜினியை தடுத்து நிறுத்தியதும் அவரது மனைவி தான்.

ரஜினிக்கு இருக்கும் சொத்து சுகத்தை வைத்து, ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பது போன்ற நல்ல விஷயங்களையும் செய்ய விட்டிருக்கலாம். ஆனால் தன்னுடைய சுயநலத்திற்காக மட்டுமே ரஜினி மாற்றிய மனைவி லதா, சமூக சேவைகளையும் செய்யத் தூண்டி இருக்கலாம்.

அப்படி இல்லை என்றால் ரஜினி செய்ய நினைத்தால் அதை அவர் போக்கில் விட்டிருக்கலாம். இந்த விஷயங்களில் இறுக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. ரஜினி பிறருக்கு உதவி செய்தாலும். அதை செய்யக்கூடாது என கோல் போட்டு குறுக்க நின்ற மனைவி லதாவால்தான், வேறு வழி இல்லாமல் அவர் ஆன்மீகத்தை கையில் எடுக்க வேண்டியதானது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →