சினிமாவில் டாப் நடிகர்களுடன் கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்த இவர், இரண்டு மாஸ் ஹீரோக்களின் படங்களில் அதிகமாக நடித்தார். அதனால் இருவரையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்வதில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பந்தி விரித்து இருக்கிறார். மற்ற எந்த நடிகைகளும் அவர்களிடம் கிட்ட நெருங்க விடாத அளவுக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்து இருவரையும் நன்றாக பார்த்துக் கொண்டார்.
ஆனால் அந்த டாப் இரண்டு ஹீரோக்களும் நெருங்கிய நண்பர்கள். இருந்தாலும் இந்த நடிகையிடம் மாஸ் ஹீரோ, ரொமான்டிக் கதாநாயகனை பற்றி தவறாக பேசுவார். அதன் பிறகு அந்த ரொமான்டிக் ஹீரோ மாஸ் ஹீரோவை பற்றி கவர்ச்சி நடிகையிடம் தவறாக பேசுவார்.
இப்படியே சென்று கொண்டிருக்க, ஒருநாள் மாஸ் ஹீரோவும் ரொமான்டிக் கதாநாயகனும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டார்களாம். என்னைப்பற்றி நடிகை உன்னிடம் என்ன சொன்னார் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் இருவரிடமும் அந்த நடிகை எதுவும் சொல்லியிருக்க மாட்டார். இது எதற்காக என்றால் இருவரும் கவர்ச்சி நடிகையை சோதித்துப் பார்த்துள்ளனர்.
நடிகை எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ள இவர்கள் வைத்த சோதனை. ஒரு கட்டத்தில் ரொமான்டிக் ஹீரோ கவர்ச்சி புயலை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். அதற்கு அந்த நடிகை, ‘திருமணம் செய்து என்ன செய்யப் போகிறாய்! அதை நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம் அல்லவா. அதனால் திருமணம் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்.
இதை கேட்ட மாஸ் ஹீரோ, எதற்காக திருமணம் வேண்டாம் என சொன்னாய்? ரொமான்டிக் ஹீரோ சினிமாவில் எவ்வளவு பெரிய ஆள் என தெரியுமா! அவரை திருமணம் செய்து கொண்டால் உன்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என சிபாரிசு செய்தார். அதற்கு அவர், ‘நான் திருமணம் செய்து கொண்டால் என்னுடைய நடிப்பு தொழில் என்னை விட்டு போய்விடும். அதனால் திருமணம் வேண்டாம்’ என்று கூறிவிட்டார்.
அந்த நடிகை டாப் நடிகையாக இருக்கும் வரை அந்த இரண்டு ஹீரோக்களையும் அடிக்கடி சந்தோஷப்படுத்தி கொண்டிருந்தார். கடைசியில் அவருடைய மார்க்கெட் சரிந்த பின், இப்போது இருவரும் அவரைக் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. ஆனால் இப்போதும் டாப் நடிகர்களாக கலக்கி கொண்டிருக்கும் இவர்கள், தவறு செய்தாலும் சரி நட்புடன் ஒன்றாக இருந்ததற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.